தருமபுரி, மே 3- தருமபுரி நகரப்பகுதிகளில் வியாழனன்று மாலை பெய்த சாரல் மழையால், வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது. தருமபுரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஏப்ரல் மாதத் தில் பல நாட்கள் 100 டிகிரியைக் கடந்து வெயில் வாட்டி வதைத்தது. இதில் கடந்த சில நாள்களாக 105 டிகிரியை கடந்து வெயில் கடுமை யாக காணப்பட்டது. இதனால் வெப்ப அலையில் சிக்கி பொதுமக் கள் பரிதவித்தனர். பகல் வேளை களில் பெரும்பாலும் மக்களின் நட மாட்டம் மிகக்குறைந்த அளவி லேயே இருந்தது. வாட்டி எடுக்கும் வெயிலில் இருந்து தணித்துக் கொள்ள இளநீர், மோர், பழச்சாறு கள், நுங்கு ஆகியவற்றை பொது மக்கள் வாங்கி, சாப்பிட்டு வருகின் றனர். இந்நிலையில், வியாழனன்று வழக்கத்தைக் காட்டிலும் கூடுத லாக 108.5 டிகிரி வெப்பம் மாவட் டத்தில் பதிவானது. இதைத்தொ டர்ந்து வியாழனன்று மாலை 6 மணிக்கு திடீரென வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதையடுத்து சிறிது நேரத்தில் தருமபுரி நகரம், புறநகர் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் வெப் பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. இதேபோல மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் லேசான மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாழை மரங்கள் சேதம் நல்லம்பள்ளி ஒன்றியம், இண் டூர் அருகேவுள்ள மூக்கனஅள்ளி சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயராக இருந்த வாழை மரங்கள், வியாழ னன்று மாலை பெய்த மழையால் முறிந்து விழுந்தன. கடன் பெற்று குழந்தைகளை வளர்ப்பதை போல ஒரு வருட காலமாய் கடும் வறட்சி யிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி தங்களது வாழ்வாதாரமாக கருதி காப்பாற்றி வைத்திருந்த வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்துவிட்டன. இதனால் ஏற்பட் டுள்ள பாதிப்பை ஈடுகட்ட அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும். இல்லையென்றால் விவ சாயத்தை விட்டு விட்டு, கூலி வேலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்ட மூக்கனஅள்ளி விவசாயி சேகர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.