districts

img

மரம் விழுந்து நூறுநாள் தொழிலாளர்கள் படுகாயம்

தருமபுரி, செப்.1- மெணசி கிராமத்தில் நூறுநாள்  வேலைசெய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக மரம் முறிந்து விழுந்ததில், 5 பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி ஒன்றியத்துக்குட்பட்டது மெணசி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட மெணசி கிராமத்தில், டேம் கால்வாய் சீரமைக்கும் பணியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற் பட்டோர் வேலை செய்து கொண்டிருந்த னர். அப்போது கால்வாய் அருகே இருந்த மரம் எதிர்பாரத விதமாக முறிந்து விழுந்ததில், கால்வாய் சீர மைப்பு பணியில் இருந்த பழனியம் மாள் (55), முத்தம்மாள் (64), பாப்பாத்தி (55), மேகலா (55), ராஜாமணி (55),  சத்யா (40) ஆகியோருக்கு காயம் ஏற் பட்டது. இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பாப் பாத்தி, முத்தம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். பாப்பாத்தி என்பவருக்கு கழுத்து,  விலா எலும்பு ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முத்தம்மாள் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இவர் களை அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கோவிந்தசாமி உள்ளிட்டோர் ஆறு தல் தெரிவித்தனர். மேலும், விவசாய  தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.கிருஷ்ணவேணி, மலை வாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலை வர் கண்ணகி, நிர்வாகி இந்திராணி ஆகி யோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருப வர்களை, சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து கூறுகையில், மெணசி கிராமத்தில் நூறுநாள் வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர் கள் மீது மரம் விழுந்து கடுமையான உடல் காயம் ஏற்பட்டு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். மேலும், நூறுநாள் வேலை செய்யும் பணியிடத் தில் ஓய்வறை, குடிநீர், மருத்துவ முத லுதவி உள்ளிட்ட பணி பாதுகாப்புகளை  மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.