அவிநாசி, ஜூன் 14- அதிமுகவின் கோட்டை அவி நாசி என்பார்கள் அந்த கோட் டையில் ஓட்டையை போட்டு வெற்றி பெற்றுள்ளதாக திமுக வின் துணைப் பொதுச் செயலாள ரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ரசா தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளு மன்ற தேர்ததில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு ஆ.ராசா தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார். முன்னதாக வியாழனன்று கோவை விமான நிலையத்தில், ஆ.ராசாவிற்கு திமுகவின் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு ஆ.ராசா பேசுகையில், அவிநாசி அதிமுக கோட்டை என்பார்கள். அந்த கோட்டையில் ஓட்டை போட்டு, அவிநாசி தொகுதியில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அளித்துள்ளீர்கள். என்னை மக்களவைக்கு மீண்டும் அனுப்பி வைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன். இனி. பிரதமர் மோடி, பழைய மோடியாக இருக்க மாட் டார். அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என மோடி கூறினார். ஆனால், மக்கள் அந்த எண்ணத் திற்கு முடிவு கட்டியுள்ளனர். அனைத்துத் தர மக்களின் ஒற்று மைக்குக் காரணம் அரசியல் சட்டம் தான். இனி மோடியை அவிநாசி அப்பர் தூங்க விட மாட்டார். ஆட்சிப் பொறுப்பிற்கு வராவிட்டாலும் சமூக நீதியை டெல்லியில் உரு வாக்கும் பணியை நாங்கள் செய் வோம். அத்துடன் நீலகிரி மக்கள வைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான எல்லாப் பணிகளை யும் செய்து தருவேன், என்றார்.
முன்னதாக இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப் பினர் சரவணன் தம்பி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச் சாமி, ஒன்றியச் செயலாளர் சிவப்பி ரகாஷ் பால்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக் கவுன்சில முத்துசாமி, இந்திய கம் யூனிஸ்ட்கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் கோபால், காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் கோபாலகி ருஷ்ணன், சாய் கண்ணன், மதிமுக, உள்பட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமனோர் பங்கேற்றனர். இதேபோன்று மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதி களிலும் ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவிநாசி அருகே கருவலூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஆ.ராசா திறந்து வைத்தார். இதில் திமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், திருமுருகன்பூண்டி ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், துணைத் தலைவர் நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.