districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மூதாட்டி படுகொலை 

கோவை, செப்.1- வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடையாளம் தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி  அருகே தோட்டத்து வீட்டில் பாப்பம்மாள் (72)  மற்றும் அவரது கணவர் கணபதியப்பன் (76) மகள் மற்றும்  பேரன்,பேத்திகள் என 5 பேர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் வியாழனன்று இரவு பாப்பம்மாளின் கணவர்  கணபதியப்பன் மற்றும் அவரது மகள், பேரன், பேத்தியுடன்  கணியூர் பகுதியில்  புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டை பார்க்க  சென்றுள்ளனர். மூதாட்டி பாப்பம்மாள் மட்டுமே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில்,  கணபதியப்பன் மற்றும் அவரது மகள் பேரன், பேத்தி ஆகியோர் வீட்டிற்கு   திரும்பி வந்து பார்த்தபோது பாப்பம்மாள் வாசலில் வெட்டு  காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்டு கூச்சலிட்ட கணபதி யப்பனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ரத்த வெள் ளத்தில் கிடந்த மூதாட்டி பாப்பமாளை தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாப்பம்மாள் ஏற் கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மழை நீருடன் சாயக்கழிவு நீர் வெளியேற்றம்

நாமக்கல், செப்.1- மழை நீருடன் சாயக்கழிவு நீரை  வெளியேற்றி வருவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட வாய்ப்புள்ள தாக பொதுமக்கள் தெரிவித்துள் ளனர்.  நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் மற்றும் பள்ளி பாளையம் பகுதிகளில் சுமார்  300க்கும் மேற்பட்ட சாய ஆலை கள் இயங்கி வருகின்றன. இந் நிலையில், சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப் படாமல் கழிவு நீர் வெளியேற்றப் படுவதாக புகார்கள் வருவதை ஒட்டி, அடிக்கடி மாசு கட்டுப்பாட்டு  வாரிய அதிகாரிகள் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். அவ் வப்போது ஒரு சில சாயப்பட்ட றைகளுக்கு சீல் வைப்பது மற்றும் அபராதத் தொகை விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனாலும், சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க முடியாத நிலையே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  மருத்துவர் உமா, பள்ளி பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, சுத்திக ரிப்பு செய்யப்படாமல் கழிவு நீர்  வெளியேற்றினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என எச் சரித்து சென்றார்.  இந்நிலையில்,  சாய ஆலைகள்  பெரும்பாலும் இரவு நேரங்களில் சாயக் கழிவு நீரை தேக்கி வைத்து,  திறந்து விட்டு வருகின்றனர்.

இத னால் காவிரி ஆற்று நீர் மாசு ஏற்படு கிறது. காவிரி ஆற்றை பயன் படுத்தும் பொதுமக்களுக்கு தோல்  நோய், அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு  விதமான தொற்று நோய்கள் ஏற் படுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,  சாய ஆலை களில் பகல் நேரங்களில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, தாங்கள் சுத்திகரித்துத்தான் சாயக்  கழிவு நீரை வெளியேற்றி வருவ தாக தோற்றத்தை மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகளிடம் சாய  ஆலை உரிமையாளர்கள் ஏற் படுத்துகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் தொடர்ந்து சாயக்கழிவு நீரை வெளி யேற்றி வருவது பொதுமக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  வருகிறது. இந்நிலையில், கடந்த  இரண்டு தினங்களாக குமார பாளையம், பள்ளிபாளையம் பகுதி களில் தொடர்ந்து இரவு நேரங் களில், மழை பெய்து வருவதால், சாய ஆலைகள் தங்கள் சாயக் கழிவுநீரை தேக்கி வைத்து இரவு  நேரங்களில் சாக்கடை கால்வாய் மூலம் காவிரி ஆற்றில் கலந்து விடு கின்றது. இதனால் காவிரி ஆறு மாசு படுவதுடன் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள் ளனர். இது குறித்து உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள், இது போன்று செயல்படும் ஆலைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதன் உரிமையாளர் களின் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள்  கோரிக்கை விடுகின் றனர்.

ரூ.1 கோடிக்கு கால்நடைகள் ஏலம்

ஈரோடு, செப்.1- புஞ்சை புளியம்பட்டி நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்க்கான கால்நடை கள் விற்பனையாகின. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம் பட்டியில் வாரச்சந்தை புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் கூடுவது வழக்கம். இது தமிழ் நாட்டின் 2 ஆவது மிகப்பெரிய சந்தையாகும்.  இச்சந்தையில் கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், தாராபுரம் மற்றும் புளியம் பட்டி சுற்றுபகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற் பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயி கள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடை களை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.  இந்நிலையில், கடந்த 2 நாட்களில் கூடிய  மாட்டு சந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.52 ஆயி ரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத் துக்கும், எருமைகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்றது. இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரத்துக்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12  ஆயிரம் வரை விற்பனையானது. அதே போல் வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் மற்றும் செம்மறியாடுகள் ரூ.12ஆயிரம் வரை யும் விற்றது. மொத்தம் ரூ.1 கோடிக்கு கால் நடைகள் விற்பனையானதாக என வியாபாரி கள் தெரிவித்தனர்.

மேம்பாலங்கள் அமைக்க ஏலம் அறிவிப்பு

ஈரோடு, செப்.1- பெருந்துறை புறவழிச்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க ஆன்லைன்னில் ஒப்பந்தப்புள்ளி கோரி ஏல அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது. சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை யில், பெருந்துறை பகுதியில் உள்ள காஞ்சிக் கோவில், பெத்தாம்பாளையம், துடுப்பதி, வாய்ப்பாடி சாலை சந்திப்புகளில் ஏதாவது  ஒரு இடத்தில் சாலையை கடக்கும் நபர்கள்  மற்றும் வாகனங்கள் விபத்துகளை சந்தித்து  வருகின்றன. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். எனவே, அப் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும்  என தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.  இந்நிலையில், சேலம் - கொச்சின் தேசிய  நெடுஞ்சாலையில் சுமார் ரூ.92.60 கோடி  மதிப்பீட்டில், சித்தோடு மற்றும் பெருந்துறை  புறவழிச்சாலையில் காஞ்சிக்கோயில் மற்றும் துடுப்பதி சாலை சந்திப்புகளில்  மேம்பாலங்கள் மற்றும் பெத்தாம்பாளையம்,  விஜயமங்கலம் – வாய்பாடி சந்திப்பு சாலை களில் அணுகு சாலைகள் அமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரி ஆன்லைன்னில் ஏல அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரியை குறைத்திடுக  ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை மனு

கோவை, செப்.1- வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரியை குறைக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோய லிடம் விவசாயிகள் மனு அளித்தனர். கோவையில் இந்திய ஜவுளித் தொழில்  கூட்டமைப்பு, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சாா்பில் 11 ஆவது ஆசிய ஜவுளி மாநாட்டில், ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு அழைப் பாளராகக் கலந்து கொண்டார். அவரிடம், விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட 40 சதவிகிதம் ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும். அதேபோல் தேங்காயின் விலை  கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, பாமாயிலுக்கு மாற்றாக இந்தியா  முழுவதும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். ஒன்றிய  அரசு கொப்பரைத் தேங்காய் விலை ரூ. 108.50 விலை நிர்ணயத்தும், உரித்த தேங் காயை கொள்முதல் செய்ய வேண்டுமென்று  உத்தரவு பிறப்பித்தும் அது விவசாயி களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. தென்னை விவசாயி களின் நிலைமை கவலைக்குரியதாக உள்ள தென்ற மனுவில் தெரிவித்திருந்தனர். வெங்காயப் பிரச்னையை நிதி அமைச் சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதா கவும், தேங்காய் பிரச்சனையை உரிய துறை  அதிகாரிகளோடு கலந்து பரிசீலித்து நடவ டிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

காதலி கழுத்தை அறுத்து கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி

திருப்பூர், செப். 1 – திருப்பூர் அவிநாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவ ரின் மகள் சத்யஸ்ரீ (வயது 21). இவர் திருப்பூர் குமார்நகர்  60அடி சாலை தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாள ராக வேலை செய்து வந்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன் னார்குடியை சேர்ந்தவர் நரேந்திரன் (25) என்பவரும், சத்யஸ்ரீ யும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில  நாட்களாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இத னால் சத்யஸ்ரீ நரேந்திரனுடன் பேசுவதை நிறுத்தினார். இந்நிலையில் வெள்ளியன்று காலை நரேந்திரன் தனியார்  மருத்துவமனைக்கு வந்து சத்யஸ்ரீயுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்தார். இதில்  ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சிறிது நேரத்தில் அங்கேயே  சத்யஸ்ரீ உயிரிழந்தார். நரேந்திரனும், தனது கழுத்தை கத்தி யால் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.  இது குறித்து தகவல் அறிந்து திருப்பூர் வடக்கு போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய நரேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் நகரின் மையப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற இச்சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனுப்பர்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.1- தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத் தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலரை கண்டித்து  திருப்பூர் மாவட்டத்தில் வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாண வர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புக ளின் சார்பில் அனுப்பர்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரவீன் தலைமை யில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாணவர்  சங்க மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது, மாதர் சங்க  மாவட்டத் துணைச்செயலாளர் செல்வி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்டத் தலைவர் நந்தகோபால், வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் உட்பட தோழமை  அமைப்புகளில் இருந்து முகில்ராசு, சன்.முத்துக்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில்  40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வடக்கு பகுதி கிராமங்களுக்கு நான்காவது குடிநீர் திட்டம் தேவை

திருப்பூர், செப்.1 - திருப்பூர் வருவாய் கோட்டதிற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று விவசா யிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, இப்பகுதிகளில் உள்ள கால் நடைகளுக்கு வாய்ச்சப்பை நோய், கோமாரி நோய், பெரி யம்மை நோய்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு அனைத்து பகுதி களிலும் அந்ததந்த பகுதி கால்நடைத் துறை மருத்துவர் களைக் கொண்டு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக தடுப்பூசி செலுத்த வேண்டும். பொங்குபாளை யம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர்,  ஈட்டிவீராம்பாளையம், தொரவலூர், மேற்குப்பதி, சொக் கனூர், பட்டம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு 4  ஆவது குடிநீர் திட்டம் மூலம குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பயிலரங்கம்

திருப்பூர், செப்.1- ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில்  திருப்பூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு பயிலரங்கரம் வெள் ளியன்று தனியார் விடுதியில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பத்திரிகை தகவல் அலுவலகக் கூடுதல்  தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை வரவேற்றார். பாரதி யார் பல்கலைகழக பேராசிரியர் ஸ்ரீஹரி பத்திரிகை தர்மம்  குறித்தும், பத்திரிகையாளர்கள் பணி பாதுகாப்பு, ஓய்வூதியம்  வழங்குவதன் தேவை குறித்தும் பேசினார். இணை இயக்குநர்  பி.அருண்குமார் போலி செய்திகள் கண்டறிவது குறித்து பேசி னார். எம்எஸ்எம்இ கோவை மண்டல அலுவலர் ராஜேந்திரன் பேசுகையில், தொழில் தொடங்கும் பட்டியலின மற்றும் பழங் குடியின பெண்களுக்கு பிணை இல்லாத கடன் ரூ.2 கோடி  வரை வழங்குவதற்கான திட்டம் உள்ளது, சான்றிதழ் பெறு வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என ஒன்றிய அரசின் திட் டங்கள் குறித்துப் பேசினார். இதில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும்  பணி குறித்து பேசும்படி தெரிவித்தனர். இதன் மீதும் விவாதம்  நடைபெற்றது.

உடுமலை வேளாண் பொறியியல் அலுவலகத்தை இடம் மாற்ற விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், செப். 1 – உடுமலைபேட்டை வேளாண் பொறியியல் அலுவலகத்தை இடம் மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் வியாழனன்று விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அர சாணைப்படி கடன் தள்ளுபடி சான்றிதழ்  பெற்ற விவசாயிகள் சிலர் வெளிக்கடன்  பெற்று கடனை செலுத்தியிருந்தனர். தற் போது தள்ளுபடி கடனுக்கான தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு அனுப்பியுள்ளது. இதுநாள் வரை  அந்த தொகை விவசாயிகளுக்கு பட்டு வாடா செய்யப்படவில்லை. உடனடி யாக அந்த தொகையை சிரமத்தில் இருக்கும் விவசாயிகள் நலன் கருதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  உடுமலை தாலுக்கா சர்க்கார் புதூர் விவசாயி எம்.சுப்பிரமணியம் கடன் தள் ளுபடி சான்றிதழ் பெற்றுள்ளார். அவ ருக்கு உரிய கடன் தள்ளுபடி தொகை  இன்னும் வழங்கப்படாத நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று கடும் சிர மத்தில் இருப்பதால் தனது கடன் தள்ளுபடி தொகை ரூ.1.30 லட்சத்தை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.  உடுமலைபேட்டை வேளாண்மை  பொறியியல் அலுவலகம் புறநகரில்  உள்ள சங்கர்நகருக்கு மாற்றப்பட்டுள் ளதால் விவசாயிகள் அங்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

பொள்ளாச்சி, பழனி பகுதிகளில் வேளாண்மை பொறியியல் அலுவல கம் வேளாண்மை துறை சார்ந்த தோட் டக்கலை, மார்க்கெட்டிங் கமிட்டி உள்ள  ஒரே இடத்தில் அமைந்துள்ளது. அது போல் உடுமலையிலும் இந்த அலுவல கங்கள் உள்ள பகுதியில் போதுமான இடம் இருப்பதால் வேளாண்மை பொறி யியல் துறை அலுவலகத்தை அங்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். கடந்த ஏப்ரல் முதல் மூன்று மாதங்களாக வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது எவ்வித பதி லும், நடவடிக்கையும் இல்லை. இதன்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.  பெரியவாளவாடியில் இருந்து சர்க் கார் புதூர் செல்லும் சாலையை தார்ச்சா லையாக மாற்றித் தர வேண்டும். பெரிய வாளவாடியைச் சேர்ந்த சீதாபதி என் பவர் அளித்த மனுவில், வருவாய் துறை  கிராம உதவியாளராக பணியாற்றும் தி. திலீப் என்பவர் தனது வீட்டுக்கு முன் புள்ள 70 சதுரமீட்டர் இடத்தில் இருந்த  அரசமரம், விநாயகர் கோயில் ஆகிய வற்றை தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி அகற்றி விட்டார். அத்துடன் தனது வீட்டை விரிவுபடுத்தி கட்டி முழு மையாக சட்டவிரோதமாக ஆக்கி ரமிப்பு செய்துள்ளார். பெரிய வாளவாடி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான, தரிசாக உள்ள கோவில் நிலத்தைப் பொது ஏலம் விட வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் கோயில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். 

சவுதி அரேபியாவில்  செவிலியர் பணிக்கு அழைப்பு

திருப்பூர், செப். 1 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம்  சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு மற்றும் 2 ஆண்டு  பணி அனுபவத்துடனும், பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற  35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாட்டா ஃப்ளோ மற் றும் ஹெச்ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர் கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்த நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேலும்  இது தொடர்பாக www.omcmanpower.com  என்ற வலை தளத்தில் கண்டு பயன்பெறலாம். ஊதியம் மற்றும் பணி விவ ரங்கள் பற்றி 9566239685, 6379179200, 044- 22505886, 22502267  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்த ஒரு இடைத்தரகரும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து  கொள்ளலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியை  பொறுத்து முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு பெறும் பணி யாளர்களிடம் இருந்து சேவைக்கட்டணம் ரூ. 35,400 வசூ லிக்கப்படும். விருப்பம் உள்ள பெண் செவிலியர்கள் மேற் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மகனை கொன்ற தந்தை கைது

திருப்பூர், செப்.1– திருப்பூர் மாவட்டம் பெரு மாநல்லூர் அருகே மேற்குப் பதி ஊராட்சி கிருஷ்ணாபு ரத்தை சேர்ந்த விவசாயி ராம சாமி (90). இவரது மகன் பழ னிசாமி (65), மகள் சுப்புலட் சுமி (58). தனது சொத்தில் ஒரு  பகுதியை தனக்கு வைத்துக்  கொண்டு, ஒரு பகுதியை மகன், மகளுக்கு சரி பாதி யாக பிரித்துக் கொடுத்தார். ராமசாமியிடம் இருந்த 1.30 ஏக்கர் இடத்தை தனக்கு எழு தித் தருமாறு மகன் பழனி சாமி தொந்தரவு செய்தார். ராமசாமி தன்னுடைய பெய ரில் இருந்த இடத்தை வேறு  நபருக்கு விற்க முயன்றார்.  இதை தடுக்க முயன்றதால் மகன் மீது ஆத்திரம் கொண் டார். வெள்ளியன்று வீட்டில் கட்டிலில் படுத்திருந்த மகன்  பழனிசாமியை, ராமசாமி சம் மட்டியால் அடித்து கொலை செய்தார். பெருமாநல்லூர் போலீஸார் கொலை வழக்கு பதிந்து முதியவர் ராமசாமியை கைது செய் தனர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்

சேலம், செப்.1- ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தி யாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாக லாரி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 63 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச் சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடி களுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது. இதன்  அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சேலம் லாரி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கூறுகை யில், திருச்சி, திண்டுக்கல், சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர் பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 26 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வு கண்டனத்திற் குரியது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர அபாயம் ஏற்படும். ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கண்துடைப்பு காரணமாக சமை யல் எரிவாயு விலையை குறித்துள்ளது. அதேநேரத்தில் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக சுங்கச்சாவடி கட்ட ணத்தை உயர்த்தி உள்ளது. ஒருபுறம் எரிவாயு விலையை  குறைப்பதாக நாடகம் ஆடிக்கொண்டு, மறுபுறம் சுங்கச் சாவடி கட்டணத்தை உயர்த்தி அனைத்து பொருட்களின் விலை உயர்விற்கு காரணமாக ஒன்றிய அரசு உள்ளது. உடன டியாக சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், என் றனர்.

முதியவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு 
தருமபுரி, செப்.1- 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவர் மீது போக்சோ சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்ற னர்.  தருமபுரி பேருந்து நிலையம் அருகே சத்திரம் தெருவில் பாலசுப்பிரமணி (75) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் 5 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி சிறு மியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவைகளை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தருமபுரி அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில்,  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அனைத்து  மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான பாலசுப்பிரமணியனை தேடி வருகின்ற னர்.

தேயிலை விலை ரூ 14.54 நிர்ணயம்
உதகை, செப்.2- நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை நம்பி  சுமார் 65 ஆயிரம் சிறு குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். 16 கூட்டுறவு மற்றும் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற் சாலைகள் உள்ளன. மாவட்டத்தில் ஒவ்வொரு மாத துவக் கத்திலும் அந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்தது. இதன்படி ஆகஸ்ட் மாத விலையாக  ரூ.14.54 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதென தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தெரிவித் துள்ளார்.

சாலையில் சுற்றிய காட்டு யானை கூட்டம்

கோவை, செப்.1- ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் யானை, மான், புலி, வரையாடு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது வெயில் காலம் நிலவி  வருவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்திலிருந்து விலங்குகள் பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா  வருகிறது. இந்நிலையில், ஆழியாரை அடுத்த நவமலை சாலையில் வெள்ளியன்று காலை காட்டு யானை கூட்டம், பேருந்துக்கு முன்பாக ஒய்யாரமாக நடை இட்டு சென்றது இத னைக்கண்ட பேருந்தில் பயணிக்கும் பயணிகள் வீடியோ  எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

ரூ.3 லட்சத்திற்கு  பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, செப்.1- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு, வியாழ னன்று 707 கிலோ பட்டுக் கூடுகள் கொண்டு வரப்பட் டன. இதில் ஒரு கிலோ பட்டுக் கூடு அதிகபட்சமாக ரூ.604க் கும், குறைந்தபட்சமாக ரூ.317க்கும், சராசரியாக ரூ.523.91க்கும் விற்பனையா னது. மொத்தம் ரூ.3 லட்சத்து  56 ஆயிரத்து 254க்கு விற் பனை செய்யப்பட்டதாக ஏல அதிகாரிகள் தெரிவித்தனர்.