districts

img

அரசுப்பள்ளிக்கு சரியாக வராத தலைமை ஆசிரியர்

சேலம், ஆக.19- அரசுப்பள்ளிக்கு சரியாக வராத தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யரை பணி நீக்கம் செய்ய வேண்டும்  என வலியுறுத்தி பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தனர். சேலம் மாவட்டம், கல்பாரப்பட்டி கிராமம், புதுப்பாளையத்தில் செயல் பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கல்வி  பயின்று வருகின்றனர். இப்பள்ளி யில் பணியாற்றும் தலைமை ஆசி ரியை அனிதா மற்றும் ஆசிரியர் வரத ராஜ் ஆகியோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கு சரியாக வருகை புரிவதில்லை என வும், மாணவ, மாணவிகளுக்கு சரிவர பாடம் சொல்லித்தருவதில்லை என  பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். பள்ளி மாணவிகளுக்கு முறை யாக காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், அரசு வழங்கக் கூடிய பாடப்புத்தகங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. தலைமை  ஆசிரியை அனிதா 20 ஆண்டுக ளுக்கு மேலாக இதே பள்ளியில் பணி யாற்றி வருவதால், அவர் மீது கொடுக் கப்படும் குற்றச்சாட்டிற்கு கல்வி அதி காரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் திங்களன்று சேலம் ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்த னர்.

பாதியில் நின்ற லிப்ட்: மக்கள் அலறல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்த பல மின் தூக்கிகள் செயல்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் மின் தூக்கி தினமும் பரிசோத னைக்கு உட்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொது மக்கள் பயன்படுத்தும் மின் தூக்கி சரிவர பராமரிப்பு செய்யப்படுவ தில்லை. இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில்  பங்கேற்க வந்த பொதுமக்கள் மின்தூக்கியை பயன்படுத்தினார். அப்போது, 5 ஆவது எண் மின்தூக்கி பழுதாகி பாதியில் நின்றதால்,  அதிலிருந்த பொதுமக்கள் அலறினர். இதைத்தொடர்ந்து அசம்பா விதங்கள் ஏற்படாத வண்ணம் விரைவாக மின் தூக்கி கீழே இறக்கப் பட்டு அதிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டனர். அரசு அலுவலகத்தில் செயல்படும் மின்தூக்கிகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.