districts

img

அரை நூற்றாண்டு காலத்தை அர்ப்பணித்த மிகச் சிறந்த கம்யூனிஸ்ட்

சிவகங்கை, அக்.7- திருப்புவனத்தில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.கே.தண்டியப்பன் உடல், தலைவர்கள் மற்றும் அரசு  அதிகாரிகள் அஞ்சலிக்குப் பிறகு  சிவகங்கை அரசு மருத்துவமனை யிடம் தானமாக அளிக்கப்பட்டது. தோழர் ஆர்.கே.தண்டியப்பன் (வயது 70) ஞாயிற்றுக்கிழமை கால மானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து, துயரமும் வேதனையும் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், திருப்புவனத் தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ஆர்.கே.தண்டியப்பன் உடலுக்கு நேரில்  மாலை அணிவித்து அஞ்சலியும் செவ்வணக்க மும் செலுத்தினார்.  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், சு.வெங்கடே சன் எம்.பி., கே.பாலபாரதி, என்.பாண்டி, மாநிலக்  குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.கே.பொன்னுத் தாய் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சாத்தையா, இளையான் குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், மதிமுக செயலாளர் பழனிச்சாமி  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

புகழஞ்சலி

டைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் (பொறுப்பு) வி.கருப்புச்சாமி தலைமை யேற்றார். கூட்டத்தில் பேசிய தலைவர்கள், தோழர் தண்டியப்பனின் அரசியல் வாழ்க்கையையும் சமூக பங்களிப்பையும் நினைவு கூர்ந்தனர். தண்டி யப்பன் தனது 22 வயதில் பூவந்தி கிராமத்தில்  தீண்டாமைக்கு எதிராக போராடியதாகவும், ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பையும் மீறி சமரச மின்றி போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் தலைவர்கள் புகழ்ந்துரைத்தனர். 35 ஆண்டு களுக்கு முன்பு முதுகுளத்தூரில் எதிரிகள் கைப் பற்றிய சிபிஎம் கட்சி அலுவலகத்தை மீட்டெடுத்த  பெருமையும் அவருக்கே சேரும் என்று குறிப்பிட்ட னர். சட்டக் கல்லூரியில் பயின்றவராக இருந்தபோ திலும், ஏழை எளியவர்களின் அடையாளமாக வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு  எளிமையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக வும் திகழ்ந்ததாக தலைவர்கள் பாராட்டினர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது உரையில், தண்டியப்பனின் மறைவு செய்தி அறிந்தவுடன் மாநிலக் குழு அலுவலகத்தில் இருந்த அனைவரும் பெரும் துயரம் அடைந்த தாகக் கூறினார். 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினராக இராமநா தபுரம் மாவட்டத்தில் இருந்து தண்டியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அவருடன் பணி யாற்றிய அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார். தண்டியப்பன் விவசாய சங்க மாநில குழு உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும், மாவட்ட தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பின ராகவும், மாவட்டச் செயலாளராகவும் சிறப்பாக  பணியாற்றியதாக பாலகிருஷ்ணன் பாராட்டினார்.  கூட்டங்களில் பேச்சுக்களை குறிப்பெடுக்கும் தண்டியப்பனின் பழக்கத்தையும், அக்குறிப்பு களை தொகுத்தால் கட்சியின் வரலாற்றை ஒரு  புத்தகமாக எழுதலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  கட்சிக்குள் எளிமையாகவும், மக்களோடு மக்க ளாகவும் வாழ்ந்து காட்டியவர் என்றும் பாராட்டி னார். கொக்கோகோலா நிறுவனம் நிலத்தடி நீர் வளத்தை சுரண்டியபோது மக்களை திரட்டி போராட்டம் நடத்தியதையும், 55 ஆண்டுகளாக கட்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதையும் பாலகிருஷ்ணன் சிறப்பித்துக் கூறினார். எந்த  பதவியும் வேண்டுமென கேட்காமல் கட்சிக்கு பணியாற்றியதே பெருமை என வாழ்ந்து காட்டி யவர் தண்டியப்பன் என்று புகழ்ந்தார். மேலும், தான் மறைந்த பிறகும் மக்கள் நலனுக்காகவே தன்  உடல் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், உடல் தானம் செய்திருப்பதும், அதை அக்குடும் பம் ஏற்றுக் கொண்டிருப்பதும் மகத்தானது; புற்று நோய் பாதித்த தங்களது தந்தையை கடைசி வரை  கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட அவரது மகன்கள், மருமகள்கள், மகள்களின் பாங்கும் பாராட்டத்தக்கது என்றும் கே.பால கிருஷ்ணன் குறிப்பிட்டார். இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட பிற தலைவர்களும் தண்டியப்பனின் சேவைகளை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். கட்சி யின் வளர்ச்சிக்கும் சமூக நீதிக்குமான அவரது பங்களிப்புகள் நினைவு கூரப்பட்டன.

உடல் தானம்

இதைத் தொடர்ந்து, தோழர் ஆர்.கே.தண்டி யப்பன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அரசு சார்பில் சிவகங்கை கோட்டாட்சி யர் விஜயகுமார், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன்  ஆகியோர் தோழர் தண்டியப்பன் உடலுக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, தோழர் தண்டியப்பன் உடலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்கள் எம்.கருப்புராஜா, ஏ.லாசர், இராமநாதபுரம்  மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மதுரை  மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் பி.சுகந்தி,  த.செல்லக்கண்ணு, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோ கன் மற்றும் சிவகங்கை மாவட்ட தோழர்கள் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.