districts

img

இந்தியாவில் முதல் முறையாக சுகம்யா திட்டம்

கோவை,பிப். 26- இந்தியாவில் முதல் முறையாக சுகம்யா என்ற திட்டத்தை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலை யங்களிலும் புகார் அளிக்க வரும்  மாற்றுத்திறனாளிகள், முதி யோர் மற்றும் கர்ப்பினிப்பெண்கள் பயன்பெறும் வகை யில் இந்தியாவில் முதல் முறையாக சுகம்யா என்ற திட் டத்தை சுவர்கா அறக்கட்டாளையுடன் இணைந்து கோவை உக்கடம் காவல் நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.  இதன் மூலம் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் உள்ளே செல்ல ஏதுவாக சக்கர நாற்காலி செல் லும் பாதை மற்றும் சக்கர நாற்காலி, செவி, பார்வை  குறை பாடு உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிய தனியார் பணி யாளர் நியமனம், நேரடியாக சக்கர நாற்காலியில் வரும் மாற் றுத்திறனாளிகள் காவல் ஆய்வாளரை சந்திக்க ஏதுவாக  ஒலி எழுப்பான் பொருத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனா ளிகள் உரிமைக்காகவும் வசதிக்காகவும் இந்த சிறப்பு ஏற்பாடு கள் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளதாக அறக் கட்டளை இயக்குநர் சுவர்னலதா தெரிவித்தார். மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்னன் கூறுகை யில், மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்க ளிலும் புகார் அளிக்க வரும் அனைத்து வகை மாற்றுத்திற னாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட் டுள்ளது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் காவல்  நிலையங்களில் சக்கர நாற்காலி செல்லும் பாதை மற்றும் லிப்ட் வசதிகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பார்வை,  செவி குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தனியார் பங்களிப்புடன் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல கோவை மாநகரில் இடைவெளி கண்ட றிதல் என்ற அடிப்படையில் ஜிபிஎஸ் மூலம் இடங்களை குறி யிட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 50 சதவி தம் நிறைவடைந்துள்ளது. விரைவில் மற்ற பகுதிகளிலும் கேம ராக்கள் பொருத்தப்படும். மேலும் கடந்த ஆண்டில் மட்டுமே  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளது என்றார்.