மரவள்ளி கிழங்கு விலை சரிவு
நாமக்கல், டிச.12- மரவள்ளி கிழங்கு விலையில் ரூ.1000 சரிந்துள்ளதால், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, வெள்ளாளப்பட்டி, புதுசத்திரம், திரு மலைபட்டி, எஸ்.உடுப்பம், சிங்களாந்தபுரம், கொல்லிமலை, காரவல்லி, கண்டாங்கி முத்துக்காப்பட்டி, பள்ளம்பாறை உள் ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கை பயிரிட் டுள்ளனர். குறிப்பாக முள்ளுவாடி, தாய்லாந்து 226, வெள்ளை, வருஷ வெள்ளை, பர்மா, குங்கும ரோஸ் உள்பட பல்வேறு ரகங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியா பாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். புதுசத்திரம், செல்லப்பம் பட்டி, மின்னாம்பள்ளி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஆத் தூர், மலை வேப்பங்குட்டை உட்பட பல பகுதிகளில் இயங்கி வரும் ஜவ்வரிசி ஆலைகளுக்கும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவு சத்துகள், புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ண யம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். அதன்படி, கடந்த நவம்பர் மாதம் மரவள்ளி கிழங்கு டன் ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது கடந்த சில நாட் களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மரவள்ளி கிழங்கு வெட்டும் பணி பாதிக்கப்பட்டு, இந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் குறைந்து, ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.
அடிபட்ட நிலையில் புள்ளிமான் மீட்பு
பொள்ளாச்சி, டிச.12- கோவை சாலை சக்தி மில் அருகே புள்ளிமான் முகம் மற்றும் காலில் அடி பட்ட நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த னர். அங்கு சென்ற வனத் துறை ஊழியர்கள் புதரில் இருந்த புள்ளிமானை மீட்டு வனத்துறை அலுவகத்துக்கு கொண்டு சென்றனர், சிகிச்சை அளிக்கப்பட்டு அடர் வனபகுதியில் விட படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் புள்ளி மானை வேட்டையாட முயற் சித்ததன் பேரில் முகத்தில் காயமா? அல்லது வாகனம் ஏதாவது மோதிவிட்டு சென் றதா? என்பது குறித்து வனத் துறையினர் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடைக்கு சீல் ரூ.50 ஆயிரம் அபராதம்
அவிநாசி, டிச.12- அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்த கடைக்கு சீல் வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவிநாசி கிழக்கு வீதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்ப னைக்காக வைக்கப்பட்டிருப்பதாக பேரூராட்சி நிர்வாகத்தின ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினர் அந்தக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர், தட்டு, மேசை விரிப்புகள் உள் ளிட்ட 620 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த னர். இதில் ஒரு கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் 2 வது முறையாக இருப்பு வைத்திருந்த கடை உரிமையாள ருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தாராபுரத்தில் மின் குறைதீர்க்கும் நாள்
தாராபுரம், டிச. 12- தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் மின்குறைதீர்க் கும் நாள் முகாம் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள் ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்ல டம் மின்பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 14 ஆம் தேதி புதன்கிழமை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலை யில் உள்ள மின்வாரிய கோட்டப்பொறியாளர் அலுவலகத் தில் காலை 11 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.
பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
தாராபுரம்,டிச.12- தாராபுரத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை மாவட்டம் அழகர்மலை மேலூர் பகுதியை சேர்ந்த வர் ரகு (28) கூலித் தொழிலாளி. இவர் கடந்த நவ.29 அன்று தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள ரெட்டியார் பாளை யம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் வந்ததுள்ளார். இரவு நேரம் மேலும் மது போதையில் இருந்ததால் போதை தெளிந்த பிறகு சகோதரி வீட்டிற்கு செல் லலாம் என நினைத்து அங்கிருந்த பேருந்து நிறுத்ததில் தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். காலையில் கண் விழித்தபோது பைக்கை காணவில்லை. இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். புகா ரின் பேரில் குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். அப்போது சி.சி.டிவி கேமராவில் பதி வான காட்சிகளை வைத்து குற்றவாளியை அடையாளம் கண் டனர். விசாரணையில் தாராபுரம் அருகே உள்ள சின்னகாம் பாளையத்தை சேர்ந்த குமரேசன் மகன் சிவக்குமார் (21) பொன்னுசாமி மகன் ஜீவானந்தம் ( 22 ) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து பைக்கை பறிமு தல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, டிச.12- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 120 மூட்டைகள் வந்திருந் தன.குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7, 450 முதல் ரூ.7,700 வரையி லும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.7,000 முதல் ரூ.7, 180 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,600 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ. 4 லட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது. இதில் 4 வியாபாரி கள், 18 விவசாயிகள் பங்கேற் றனர்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.47/60அடி நீர்வரத்து:738கன அடி வெளியேற்றம்:721கனஅடிமழையளவு:8மிமீ அமராவதி அணை நீர்மட்டம்: 89.51/90அடி.நீர்வரத்து:1078கனஅடி வெளியேற்றம்:948கனஅடிமழையளவு:8மிமீ
அவிநாசியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அவிநாசியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அவிநாசி, டிச.12- தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளர் அலுவலகத்தில் டிசம்பர் 14 காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகி றது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கி றார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற் பொறியாளர் பி.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
பொங்குபாளையம் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது புகார்
திருப்பூர், டிச. 12 - திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் பொங்கு பாளையம் ஊராட்சியில் உள்ள இரண்டு நியா யவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் மீது ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப்பாதுகாப்புக் குழு புகார் கூறியுள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.சதீஷ்குமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பொங்குபாளையம் ஊராட்சி இரண்டு நியாயவிலைக் கடைகளில் பணியாளர்கள் சரவணன், தமிழரசி ஆகியோர் பணியாற்று கின்றனர். அவர்கள் பொருட்கள் எடை குறை வாக வழங்குவது, போலி பில் போடுவது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மண்ணெண் ணெய் வழங்குவது, பொது மக்களை கண்ணி யக் குறைவாக நடத்துவது, சாதியப் பாகு பாடு காட்டுவது, மாலை நேரங்களில் ரேசன் பொருட்களைத் தனியாருக்கு விற்பனை செய்வது என தொடர்ந்து பிரச்சனைக ளுக்கும், புகார்களுக்கும் ஆளாகி வருகின்ற னர். இதை உரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும், கிராம சபைக் கூட்டத்தில் விவா தித்தும் இனிமேல் இது நடக்காது என்று கூறி, மீண்டும், மீண்டும் ஊழல் செய்வதும், தவறு செய்வதும் தொடர்கிறது. எனவே இவர்கள் மீது உரிய விசாரணை செய்து கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சதீஷ்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அண்ணா விருது பெற அழைப்பு
நாமக்கல், டிச.12- 2023 ஆம் ஆண்டிற்கான அண்ணா விருது பெற தகுதி யானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 2023 ஆம் ஆண்டிற்கு, உயிர் காக்கும் துணிச்சலான செயல் மற் றும் உடமைகள் மீட்டெடுத்தமை போன்ற செயல்புரிந்த அரசு ஊழியர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக மட்டுமே https://awards.tn.gov.in அண்ணா விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். டிச.14 ஆம் தேதிக் குள் (நாளைக்குள்) நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி யான நபர்கள் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.234, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 யானை தந்தங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
உதகை, டிச.12- முதுமலையிலிருந்து கடத்தி சென்ற 2 யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உதகை, மசினகுடியை சேர்ந்த 5 பேரை கர்நாடகா வனத் துறையினர் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், குண்டல்பெட் அருகே பசவன்பூர் கிரா மத்தில் சந்தேகப்படும் படியாக சிலர் நடமாடுவதாகவும், மேலும், யானை தந்தங்கள் வைத்திருப்பதாகவும் பந்திப்பூர் புலிகள் காப்பக வன பாதுகாவலர் ரமேஷ் குமாருக்கு தக வல் கிடைத்தது. இதையொட்டி வன அலுவலர் நவீன்குமார் தலைமையிலான வனத்துறையினர் பசவன்பூர் கிராமத்துக்கு சென்று கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந் தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசா ரித்தனர். மேலும், அவர்கள் வந்த சுற்றுலா வேனை சோதனை செய் தனர். அதில் 2 யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் உள்ள காட்டு யானையின் தந்தங்கள் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பந்திப்பூர் வனத்துறையினர் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின் நீலகிரி மாவட்டம், மசினகுடியைச் சேர்ந்த ரங்க சாமி (35), சஜீவகுமார் (35), என்.வினோத் (36), கதிரே சன் (45), செல்வநாயகம் (44) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து 2 யானை தந்தங்கள், அதை கடத்துவதற்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனிடையே காட்டு யானை தந்தங்கள் பிடி பட்டது தொடர்பாக சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலை மையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி னர். அப்போது இறந்து கிடந்த காட்டு யானையின் தந்தங் களை வெட்டி எடுத்து, கடத்தி சென்று விற்க முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் சிலரிடம் வனத்துறையி னர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூட லூர், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
கோவையில் கடும் பனி மூட்டம் மழையால் மாணவர்கள் அவதி
கோவை, டிச.12- கோவையில் திங்களன்று காலையில் கடும் பனி மூட்டம் மற்றும் மழையால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கினர். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் இருப்பதாலும், கடந்த சில நாட்களாக சாரல் மழை பரவலாக பெய்து வருவதால், காலையில் பணி மூட்டத்து டன் காணடப்படுகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்து வரும் நிலை யில் கோவையில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்து வரு கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றனர். குறிப் பாக திங்களன்று கோவை -சிறுவாணி சாலை, நீலாம்பூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. மலைப்பிரதேசங்களில் இருப்பதுபோன்று பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் குழந்தைகள் அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன், அவற்றை செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டு வருகின்றனர். கோவையில் திங்களன்று காந்திபுரம், துடியலூர், வட கோவை, போத்தனூர், சுந்தராபுரம், ராமநாதபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப் பட்டனர்.
வெள்ள அபாயம்
ஈரோடு, டிச.12- பவானி ஆற்றின் கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. பவானி சாகர் அணை யின் நீர் மட்டம் 104.22 அடியை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழையினால் நீர்வ ரத்து அதிகரிக்கும் வாய்ப் புள்ளது. நீர்மட்டம் 104.50 அடிக்கு மேல் வரும் தண் ணீரை அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே திறந்து விடப் படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. எனவே, பவானி ஆற் றின் கரையோரம் மற்றும் தாழ் வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறும், உயிர், உட மைகளை பாதுகாக்க முன் னெச்சரிக்கையாக இருக்க வும் அறிவிக்கப்பட்டுள்ளது.