மின்சாரம் பாய்ந்து பெண் பலி
ஈரோடு, நவ.19- ஈரோட்டில் தேங்கி நின்ற மழை நீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கைகாட்டிவலசு, பாரதி நகரைச் சோ்ந்தவர் பழனிசாமி மனைவி மாதேஸ்வரி (50). இவர் ஞாயிறன்று மாலை வீட்டுக்கு அருகே நடந்து சென்றுள் ளார். அப்போது, அப்பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் கால் வைத்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து சுருண்டு கீழே விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக் கத்தினர் மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, மின் இணைப்பு துண்டித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த ஈரோடு வடக்கு காவல் துறையினர், மாதேஸ் வரியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நிலத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததை அறியாமல் மாதேஸ்வரி அந்த தண் ணீரில் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்தது தெரிய வந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சேலம், நவ.19- சூரமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திங்களன்று ஆய்வு மேற்கொண்டு, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கும் மளிகைக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தியது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் மெழுகு சாயம் பூசிய பிளாஸ்டிக் டம்ளர்களை பறிமுதல் செய்து சம்பந் தப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி னர். இதன்பின், இவை அனைத்தையும் அழித்தனர். இதேபோன்று சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் போன்ற பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இளம்பிள்ளை: இன்று மின்தடை
சேலம், நவ.19- இளம்பிள்ளை பகுதியில் புதனன்று (இன்று) மின் விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் புதனன்று (இன்று) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வேம்படிதாளம், இளம்பிள்ளை, காந்திநகர், இடங்கணசாலை, கே.கே.நகர், தப்பக் குட்டை, பெருமாகவுண்டம்பட்டி, மகுடஞ்சாவடி, சீரகா பாடி, காகாபாளையம், பொதியன்காடு, மலங்காடு, அரி யாம்பாளையம், கோத்துப்பாலிகாடு உள்ளிட்ட பகுதிக ளில் புதனன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காதென வேம்படி தாளம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரி
கோவை, நவ.19- கோவிலில் சிறுவனிடம் பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்ட பூசாரி மீது புகார் எழுந் ததைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலைத் துறையினர் பூசாரியை பணி இடை நீக்கம் செய்துள்ளனர். கோவை மாவட்டம், காட்டூர் தொட்டரா யர் பெருமாள் கோவில் பூசாரியாக பணி யாற்றி வருபவர் ரமேஷ். இந்து அறநிலையத் துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவி லில் மட்டும் பூசாரியாக பணியாற்றாமல், கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் பூஜை செய்து வருவது வழக்கம். இந்நிலை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் பெரிய கோவிலில் ரமேஷ் பூஜை செய்ய வந் துள்ளார். அப்போது அந்த கோவிலுக்கு வந்த சிறுவனிடம், கோவிலில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதுகுறித்து அப்பகுதில் உள்ள சிலர், காவல் துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அங்கு சென்று அதிகாரிகள் விசார ணையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு உள்ள அந்த கோவில் கமிட்டியினர் கூடி பேசி, அங்கு பூஜை செய்ய வர வேண்டாம் என தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து இந்து அறநிலை யத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் ததைத்தொடர்ந்து, காட்டூர் தொட்டராயர் பெருமாள் கோவில் பணி செய்து வந்த பூசாரி ரமேஷ் என்பவரை, தற்காலிக பணியிட நீக்கம் செய்தனர். கோவில் பூசாரி ஒருவர் சிறுவனி டம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நவ.26இல் போராட்டம்
ஈரோடு, நவ.19- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து வரும் நவ.26 ஆம் தேதியன்று போராட்டம் நடந்த அனைத்து தொழிற்சங்கங் கள், விவசாய, மாதர் அமைப்புகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான ஒன் றிய அரசின் மக்கள் விரோத கொள் கைகளை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய, மாதர் அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் செவ்வா யன்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள், தேச விரோத ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளைக் கண் டித்தும், விலைவாசி உயர்வை கட் டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளையும் வலியு றுத்தி வருகின்ற 26 ஆம் தேதியன்று நாடு தழுவிய போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக ஈரோட்டில் 26 ஆம் தேதியன்று சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்து வதென தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், மாதர், ஆசிரியர், கலை, இலக்கிய அமைப்புகள் மற் றும் பழங்குடி மக்கள் அமைப்பு களையும் பங்கேற்க அழைப்பது, என முடிவு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, எல்பிஎப் சார்பில் தங்க முத்து, ஹெஎம்எஸ் சார்பில் மனோ கரன், ஏஐகேஎஸ் சார்பில் சி.எம். துளசிமணி, மாதர் அமைப்புகளின் சார்பில் சண்முகவள்ளி, ஏஐசிசி டியு சார்பில் கார்த்திகேயன், எல்டி யுசி சார்பில் கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். முடி வில் எல்பிஎப் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் நன்றி கூறினார்.
டாம்கோ மூலம் ரூ.4.70 கோடி கடன்: ஆட்சியர்
கோவை, நவ.19- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறு பான்மையின மக்கள் சுயதொழில் தொடங்க 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப் பீட்டில் தனிநபர் கடன்களும், 109 பயனாளி களுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழுக்கடன் களும் வழங்கப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கை யில், தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் மேற்கொள்ள குறைந்த வட்டி விகி தத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொரு ளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில், கடந்த மூன்றரை ஆண்டுக ளில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டு கழகம் மூலம் 2022-23 ஆம் ஆண்டு 165 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கடன்களும், 98 பய னாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பில் குழுக் கடன்களும், 2023-24ஆம் ஆண்டு 128 பய னாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கடன்களும், 107 பயனாளிகளுக்கு ரூ.97.50 லட்சம் மதிப்பில் குழுக்கடன்களும், 2024-25 ஆம் ஆண்டில் 188 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கடன்கள் என மொத்தம் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கடன்களும்,205 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழுக்கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 116 உலமாக்களுக்கு ரூ.41.50 லட் சம் மதிப்பில் இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத் தூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங் கத்தின் சார்பாக 705 பயனாளிகளுக்கு ரூ.62.29 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது. கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், 1241 மாணவிக ளுக்கு ரூ.8.33 லட்சம் கல்வித்தொகை வழங் கப்பட்டுள்ளது, என்றார்.
அதிமுக பணிகளில் செயல்படும் தலைமை ஆசிரியர்!
சேலம், நவ.19- அதிமுக பணிகளில் ஈடுபடும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், கரியாம்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசியராக சீதா ராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி தலைமையில் அண் மையில் நடைபெற்ற அக்கட்சியின் விவ சாய சங்கக் கூட்டத்தில் பங்கேற்றது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிக ளுக்கு புகார் சென்ற நிலையில், தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனி டையே நடைபெற்ற விசாரணையில், அதிமுக விவசாய சங்கத்தின் பொறுப் பாளராக சீதாராமன் செயல்பட்டு வரு வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகை யில், அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு, பள்ளிக்கு வராமல் பல்வேறு அரசியல் சார்ந்த பணிகள் செய்து வருவ தாகவும், பள்ளிக்கு வந்தால் மாணவர் களுக்கு பாடம் எடுக்காமல், செல்போ னில் அதிக நேரத்தை கழித்ததாகவும் புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தாரமங்கலம் பகுதியில் உள்ள கல்வி அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியரி டம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள் ளது. விளக்கம் பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
ஏல சீட்டு நடத்தி ரூ.36 லட்சம் மோசடி - 4 பேர் கைது
உதகை, நவ.19- உதகையில் ஏல சீட்டு நடத்தி ரூ.36 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை கீழ் தலையாட்டுமந்து பகுதி யை சேர்ந்தவர் குமார் (51), இவருடைய மனைவி லதா (46). இவர்களுடைய மகன் ராகுல் (23). குமார், அந்த பகுதியில் தனது தம்பியும் ஆட்டோ ஓட்டுநருமான சகாதேவன் என்ப வருடன் இணைந்து ஏல சீட்டு நடத்தி வருகிறார். ஏல சீட்டு நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை. குமாரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஏல சீட்டு நடத்த பொதுமக்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பணியை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடைசியாக 50 பேர் அடங்கிய ரூ.1.50 லட்சம், 25 பேர் அடங்கிய ரூ.1.35 லட்சம், மற்றும் 35 பேர் அடங்கிய ரூ. 1.05 லட்சம் ஏல சீட்டு நடத்தினார். இந்த சீட்டு தொகையை வேறு உபயோகத்திற்கு குமார் மாற்றிவிட்ட தால் அவரால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால், உதகை தலையாட்டு மந்து பகு தியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மோகன்குமார் உள்பட பலர் இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் இந்த வழக்கு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், ஆய்வாளர் யமுனாதேவி, துணை ஆய்வாளர் ஜார்ஜ், தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி னர். முதல் கட்ட விசாரணையில் 20 பேர் கொடுத்த புகாரில் ரூ. 36 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும், பலர் புகார் கொடுத்துக் கொண்டு இருப்பதால் மோச டித்தொகை ரூ.50 லட்சத்திற்கும் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து குமார் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
விடுபட்ட பகுதியில் நான்கு வழிச்சாலை
தருமபுரி, நவ.19- அதிக விபத்துகள் ஏற்படும் பள்ளக் கொல்லையில் இருந்து மதிக்கொண்பாளை யம் வரை சாலையை விரிவுபடுத்தக்கோரி அப்பகுதியினர் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி - திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை விரி வாக்கம் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இந்த சாலையானது தருமபுரியில் தொடங்கி மொரப்பூர், அரூர் வழியாக திருவண்ணாமலை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தருமபுரி மதிக்கொண்பாளையத்திலிருந்து பள்ளக் கொல்லை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் 4 வழிச்சாலை அமைக்கப்படவில்லை. இந்த 2 கிலோமீட்டருக்கு இடையில் பள்ளக் கொல்லை, இந்திரா நகர், காமாராஜ் நகர் பேருந்து நிறுத்தம், ராஜாபேட்டை ஆகிய கிராமங்களில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக ராஜா பேட்டை, இந்திரா நகர் ஆகிய கிராமங்க ளின் நடுவே இந்த சாலை அமைந்துள்ளது காலை நேரங்களில் அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் முதியோர்கள் சாலையை கடக்கும் போது அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே, பள்ளக்கொல்லையில் இருந்து தருமபுரி மதிக்கொண்பாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க வேண்டும் என, வலியு றுத்தி, அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூரில் நாளை மின்தடை
திருப்பூரில் நாளை மின்தடை திருப்பூர், நவ.19- திருப்பூர் துணை மின் நிலையத்தில் நவ.21 ஆம் தேதி பராம ரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடைபடும் என செயற்பொறியா ளர் த.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மின் தடைபடும் பகுதிகள்: அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், பி.என்.சாலை, லட்சுமி நகர், சிட்கோ, காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி பிரிவு, கே.ஆர்.இ. லேஅவுட், எச்.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட் சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி தியேட்டர் ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்கார வேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
போராட்டத்திற்கு செல்லக்கூடாது; வீடு தேடிச் சென்று அங்கன்வாடி ஊழியர்களை மிரட்டிய காவல் துறையினர்
திருப்பூர், நவ.19 - சென்னையில் புதனன்று நடைபெற வுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என திருப்பூரில் அங்கன்வாடி ஊழி யர்களின் வீடு தேடிச் சென்று காவல் துறையி னர் மிரட்டல் விடுவதாகவும், கைபேசிகளை பறித்து அராஜகத்தில் ஈடுபடுவதாக அங்கன் வாடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிஐடியு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் சித்ரா கூறுகையில், தமி ழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அரசின் இஎஸ்ஐ, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நவ.20ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்த சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில மையம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அடிப்படையில் செவ்வாயன்று போராட்டத்திற்கு செல்ல தயாராக இருந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்களின் வீடுகளுக்கு சென்று காவல்துறை யினர் மிரட்டல் விடுத்துள்ளனர். குண்டடம் ஒன்றியத் தலைவர் ஜெய் சித்ரா வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், ‘நீங்கள் போராட் டத்திற்கு செல்லக்கூடாது’ எனக்கூறி, அவ ரின் செல்போனை பறித்துள்ளனர். மேலும் அவரது தாயையும் மிரட்டியுள்ளனர். இதே போன்று மடத்துக்குளம் பகுதியில் இரு அங் கன்வாடி ஊழியர்களின் வீடுகளில் காலை 11 மணி முதல் காவல்துறையினர் இருந்து கொண்டு, அவர்களை வேறு எங்கும் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்; ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி னர். வெள்ளகோவிலில் மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி வீட்டுக்கும் காவல் துறையினர் சென்று விசாரித்துள்ளனர். மேலும், பலரையும் இதுபோல் மிரட்டியுள் ளனர். இந்நிலையில் செவ்வாயன்று திருப்பூ ரில் சிஐடியு மாவட்டக்குழு கூட்டம் நடைபெற் றது. மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம்: தமிழகத்தில் இதுவரை போராட்டத் தில் பங்கேற்றால் கைது செய்வது வழக்க மாக இருந்து வருகிறது. ஆனால் போராட்டத் துக்குச் செல்லவிடாமல் முன்கூட்டியே வீடு, வீடாகச் சென்று சங்க உறுப்பினர்கள், நிர்வா கிகளை மிரட்டுவது, செல்போனைப் பறிப் பது, அவர்களைத் தடுப்பது என்பது தமிழக காவல் துறையின் உச்சக்கட்ட அராஜக மாக உள்ளது. இது அரசியல் சட்டம் வழங்கியி ருக்கும் அடிப்படை சட்ட உரிமையைப் பறிப் பதுடன், மிகக்கடுமையான மனித உரிமை மீற லும் ஆகும். இதற்கு காவல் துறை பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என்று சிஐ டியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாவட்டப் பொது நிதியில் பணம் ஒதுக்கி தார்சாலை அமைக்க கோரிக்கை
திருப்பூர், நவ.19– திருப்பூர் மாவட்டம் பொங்குப்பாளை யம் ஊராட்சி பகுதியில் மாவட்டப் பொது நிதி யில் ஒதுக்கீடு செய்து மண்சாலையை தார்சா லையாக மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் திங்களன்று மனு அளிக்கப் பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் கிளைச் ெசயலாளர் சுரேஷ் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, திருப்பூர் ஒன்றியம் பொங்கு பாளையம் ஊராட்சி காளம்பாளையம், செம் மடை மாகாளியம்மன் கோவில் முதல் பாரதி யார் நகர் வரை உள்ள சாலை, பூண்டி பெரியா யிபாளையம் சாலை, எவிபி பள்ளி, புதிய திருப்பூர் சாலைகளுக்கு இணைப்பு சாலை யாக உள்ளது. மேலும், பள்ளிபாளையம், காளம்பாளையம், பரமசிவம்பாளையம், பொங்குப்பாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் உள்ள பொதுமக்கள் சுலபமாக சென்று வர ஏதுவாக இருக்கும். இதுகுறித்து பஞ்சா யத்தில் கோரிக்கை வைத்தபோது, போதிய நிதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. எனவே மாவட்ட பொது நிதியில் இருந்து மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண் டும் என கூறப்பட்டுள்ளது. குப்பை கொட்டி நிலத்தடி நீரை மாசுபடுத்தும் மாநகராட்சி நிர்வாகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காளம்பா ளையம் மற்றும் பள்ளிபாளையம் கிளைகள் சார்பில் அளித்த மனுவில், திருப்பூர் வடக்கு வட்டம், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கச எண்: 206இல் உள்ள காலாவதி யான பாறைக்குழியில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பையை தரம் பிரிக்காமலும், குப்பை மேலாண்மை செய்யாமலும், கடந்த அக்.25 ஆம் தேதி முதல் தற்போது வரை குப்பைகளைக் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீரும் மாசடையும். எனவே பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட அனு மதிக்க கூடாது. உடனடியாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இதில், கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன், காளம் பாளையம் கிளைச் செயலாளர் ஆர்.விஸ்வ நாதன், பள்ளிபாளையம் கிளைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் மனு அளித்தனர். நிலத்தை தணிக்கை செய்ய வலியுறுத்தல்: மனு அளிக்க வந்திருந்த சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் என்.கனகராஜ் கூறுகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா ப.வடு கபாளையம் கிராமம் க.ச.எண் 60/1 மற்றும் 61 புல எண்களில் கைத்தறி நெசவாளர்கள் 293 பேருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. பூமிதான சட்டத்தில் வழங் கப்பட்ட இந்த வீட்டு மனை பட்டா கைத்தறி நெசவாளர் சங்கத்தின் கடும் போராட்டத் திற்கு பின் தற்போது ஆணையர் ஹரிஹரன் நவ.12 ஆம் தேதி வீட்டுமனை உபயோக உத்த ரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தணிக்கை செய்ய வேண் டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளோம் என தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி ஆணையாளரின் பெயரில் போலி இணையதள முகவரி
சேலம் மாநகராட்சி ஆணையாளரின் பெயரில் போலி இணையதள முகவரி! சேலம், நவ.19- சேலம் மாநகராட்சி ஆணையரின் பெயரில், போலியாக இணையதள முகவரி தொடங்கப்பட்டது குறித்து, குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி ஆணையளராக இருப்பவர் ரஞ்சித் சிங். இவரது பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் ஆகிய இணையதளங் களில் போலியாக அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளனர். மேலும், இவரது பெயரில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங், குற்றப்பு லனாய்வு பிரிவு காவல் துறையிடம் புகாரளித்தார். அதன் பேரில், சேலம் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சேலத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட வர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையர் ரஞ்சித் சிங் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பார்சல் நிறுவனத்திற்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்
நாமக்கல், நவ.19- தீபாவளி பண்டிகை கால விற் பனைக்காக பெங்களூருவிலிருந்து அனுப்பப்பட்ட துணி வகைகளை, டெலி வரி செய்யாத பார்சல் நிறுவனம், வாடிக் கையாளருக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யத்தில் வி.ஆர்.கே.டிரண்ட்ஸ் என்ற பெயரில் ஆயத்த ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருபவர் சிதம்ப ரம் என்பரின் மனைவி பிரேமா (43). இவர் தீபாவளி விற்பனைக்காக கடந்தாண்டு அக்டோபர் மாதம், பெங்களூருவி லுள்ள மொத்த ஆயத்த ஆடை கடையி லிருந்து ரூ33,075 செலுத்தி துணிகளை வாங்கியுள்ளார். தமிழ்நாட்டில் பிரபல தனியார் பார்சல் நிறுவனமான எம்எஸ் எஸ் டிரான்ஸ்போர்ட் (MSS transport) பெங்களூரு கிளை அலுவலகத்தில் ஆயத்த ஆடைகள் பார்சலை ஒப் படைத்து, குமாரபாளையம் முகவரிக்கு அனுப்ப பணத்தை செலுத்தியுள்ளார். தீபாவளி விற்பனைக்காக வந்து சேர வேண்டிய பார்சல் வராததைத் தொடர்ந்து, பார்சல் நிறுவனத்தின் உள் ளூர் கிளையில் பலமுறை தொடர்பு கொண்டும், முறையான பதிலை பார்சல் நிறுவனத்தினர் வழங்கவில்லை. தீபா வளி முடிந்தும் பார்சல் வந்து சேராத நிலையில், மனமுடைந்த பிரேமா கடந்த மார்ச் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் பார்சல் நிறுவ னம் மீது வழக்கு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பார்சல் நிறுவனத்தின் செயல்பாடு சேவை குறைபாடு என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாயன்று தீர்ப் பளித்துள்ளது. மேலும், பார்சல் நிறுவ னத்தின் சேவை குறைபாட்டால் பாதிக் கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாயும், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரத்தையும் நான்கு வாரங்களுக்குள் பார்சல் நிறுவனம் வழங்க வேண்டும். தவறினால் பணம் வழங்கப்படும் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவிகித வட்டி சேர்த்து வழங்க வேண் டும், எனவும் தீர்ப்பில் உத்தரவிடப் பட்டுள்ளது.