திருப்பூர், மார்ச் 18 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வடக்கு ஒன்றியம் மற்றும் காந்தி நகர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினவி ழாவில் சிறந்த பெண் ஆளுமைகளை பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர். காந்திநகர் ரோட்டரி சங்கத்தில் சனியன்று நடைபெற்ற இவ்விழாவிற்கு காந்திநகர் ரோட்டரி சங்க செயலாளர் வெங்கடேஷ் தலைமை ஏற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் டி. பிரேமா வரவேற்றார். வடக்கு ஒன்றியத் தலை வர் யோகநாதன் முன்னிலையில் அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராணி ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலை வர் ஆ.ஈசுவரன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாவட்ட துணைத்தலைவர் சுசிலா, அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற புத்த கத்தை குறித்து பேசினார். இதைதொடர்ந்து, திருப்பூரில் உள்ள சிறந்த பெண் ஆளுமைக ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வியில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிக் கொண்டுள்ள 50 பெண்களுக்கு விருதும், சான்றிதழும், டாக்டர் பாத்திமா, டாக்டர் காயத்தரி, கரோ லின், கண்மணி, மீனாட்சி, யோகநாதன், சுஜிதா தேவா விஷ்ணு, சுசீலா, ஜெயலட்சுமி ஆகியோர் பரிசளித்து பாராட்டினர். இதை தொடர்ந்து, வானவில் மன்ற மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கரோலின், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வ பெண்களுக்கு மரக்கன்று அளித்தார். இல்லம் தேடிக் கல்வியில் பயி லும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங் கிணைப்பாளர் கிருத்திகா நன்றி கூறினார்.