நாமக்கல், அக். 14- திருச்செங்கோடு திருமணிமுத்தாற்றில் மழை வெள் ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி-யின் உடல் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் கொன்னையார் அருகே திருமணிமுத்தாறு வாய்க்கால் உள்ளது. கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து கொண்டிருப்பதால் திருமணி முத்தாற்றில் தொடர்ந்து மழைநீர் வந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நி லையில் கொன்னையார் அரசடி காட்டில் வசித்து வரும் பெரியசாமி (58). இவர் ஆட்டு வியாபாரி மற்றும் விவ சாயம் தொழில் செய்து வருகிறார். இவரது காட்டில் இருந்து கொன்னையாறு பகுதிக்கு திங்களன்று அதிகாலை 5 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து பால் கொண்டு சென்றுள் ளார். அப்போது, திருமணி முத்தாற்றின் குறுக்கே உள்ள சிறு பாலத்தில் கீழே விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட் டார். இந்நிலையில் இது குறித்த தகவல் அறிந்த திருச்செங் கோடு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் பணி யில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பெரியசாமி பிரேதத்தை கண்டுபிடித்து ஆற்று நீரில் இருந்து மீட்கப் பட்ட போது அவரது கையில் பால் கேனுடன் இருந்துள் ளார். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்செங் கோடு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலை யில் எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.