உடுமலை, மார்ச் 11- உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வேளாண் துறையின் மூலம் அமைக்கப்பட்ட தேங்காய் உலர் களம் பயன் படுத்தப்படாமல் உள்ளது. வேளாண் துறையால் சுமார் ரூ.6.5 லட்சம் செலவில் வேளாண்துறை அலுவலக வளா கம் மற்றும் தேங்காய் உலர் களம் அமைக்கப் பட்டது. இப்பகுதி தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்து கொப்பரை தயாரிப்பது இல்லை. தங்களிடம் உள்ள தேங்காய் முழுவ தையும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் உலர் களம் பயன்ப டுத்தப்படாமல் உள்ளது. யாருக்கும் பயன்ப டாத தேங்காய் உலர் களங்கள் அமைக்க வங் கியில் கடன் பெறப்பட்டுள்ளது. தற்பொழுது களம் அமைக்க வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில், யாருக்கும் பயன்படாமல் உள்ளது. எந்த பகுதிக்கு எந்த திட்டம் தேவையோ அதை செய்யாமல் மக்களின் பணம் வீணடிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மக்க ளுக்கு பலன் அளிக்கும் திட்டங்களை செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளின் கோரிக்கை வைத்துள் ளனர்.