மேட்டுபாளையம், செப். 7- மனித-விலங்கின மோதல்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம், தமிழ் நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் வனத் துறை அதிகாரிகள் மற்றும் விவ சாயிகள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகம் சார்பில் மனித-விலங் கின மோதல்கள் குறித்து விவ சாயிகள் பங்கேற்புடன் கலந் தாய்வு கூட்டம் வச்சினாம் பாளையம் கிராமத்தில் நடை பெற்றது. தமிழ்நாடு பல்லுயிர் பாது காப்பு மற்றும் பருவநிலை மாற் றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் வனத் துறை மற்றும் விவசாயிகள், விவ சாய சங்கத்தினர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற விவசாயிகள் காட்டை விட்டு வெளியேறும் யானை, காட்டுப்பன்றி, மான் போன்ற வன உயிரினங்களால் தாங்கள் சந்தித்து வரும் பிரச்ச னைகள் பயிர் மற்றும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலி லேயே தாங்கள் விவசாயம் செய்து வருவதாகவும் வனப்பணியாளர் களின் எண்ணிக்கையை அதிக ரிக்க வேண்டும் என்றனர். யானை களின் இயல்பு அவை விவசாய நிலத்திற்குள் நுழைந்தால் செய்ய வேண்டியவை பற்றியும் மனித-விலங்கின மோதல்களை தவிர்ப் பது குறித்தும் வனத்துறையினர் விளக்கி பேசினர். சட்ட விரோத மாக மின் கம்பி வேலி அமைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான சோலார் மின் வேலி அமைப்பது பற்றியும் அதிகாரிகள் விளக்கினர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் பல்லுயிர் சூழலுக்கும் அதன் பாது காப்பிற்கும் யானைகளின் பங் களிப்பு அளப்பறியது என்பதை விளக்கம் வகையில் நாடக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறு முகை வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.