districts

img

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

தருமபுரி, ஜூன் 29- பாலக்கோடு அருகே விவசாயக் கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத் துறையினர் உயிருடன் மீட்ட னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள 5  ஆவது மைல்கல் கிராமத் திற்கு, வெள்ளியன்று உணவு தேடி வந்த 3 வயது மதிக் கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று, குமார் என்பவருக்கு சொந்தமான 60 ஆடி ஆழ முள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. தத்தளித்த படி உயிருக்கு போராடி வந்த  மானை, அவ்வழியாக சென் றவர்கள் பார்த்து அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்த தக வலறிந்த பாலக்கோடு தீய ணைப்புத்துறையினர் விரைந்து வந்து, புள்ளி மானை கயிறு கட்டி உயிரு டன் மீட்டு பாலக்கோடு வனத் துறையினரிடம் ஒப்படைத் தனர்.

;