districts

img

காங்கிரீட் பூங்காவாக மாறும் உதகை: சுற்றுலா பயணிகள் வேதனை

உதகை, மே 14- உதகை, காங்கிரீட் பூங்காவாக மாறிவருவதாக சுற்றுலா பயணி கள் வேதனையோடு தெரிவிக்கின் றனர்.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள   ஊட்டி தாவரவியல் பூங்கா 1847  ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 ஹெக்டேர் பரப்பில் பல  பிரிவுகளாக அமைந்துள்ளது.  இதன் அருகில் தொட்டபெட்டா  சிகரம் 2,623 மீட்டர் உயரத்தில்  அமைந்துள்ளது. ஊட்டி தாவர வியல் பூங்காவின் உயரம் கடல்  மட்டத்திலிருந்து 2,250 முதல்  2,500 மீட்டர்கள் வரை இருக்கும். இங்கு வருடத்திற்கு 140 செ.மீ மழை  பெய்யும். இங்கு வெப்பநிலை  குறைந்தே காணப்படுகின்றது.  மேலும், படகு இல்லம், கண்ணாடி  மாளிகை உள்ளிட்ட இன்னும் பிற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.  இந்த இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலங்களை காண்பதற்கு    உலகத்தின் பல்வேறு  பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணி கள் உதகைக்கு வருகை தருகின் றனர். இவர்கள் இயற்கையின் பல வித அழகை ரசிக்க வேண்டும் என்னும் கனவுகளோடு ஆயிரக்  கணக்கில் செலவு செய்து உதக மண்டலம் வருகை புரிகின்றனர்.

இங்கு வந்து இறங்கியவுடன் தங்கள் கண்ட காட்சிகளால் மனம் வெதும்புகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு பதி லாக, திரும்பும் பக்கமெல்லாம்  காங்கிரீட் கட்டடங்களாக மாறி யுள்ளன. இந்தக் கட்டடங்களை வரை முறைப்படுத்த பல்வேறு சட்டங்கள்  இருந்தும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான உதகை, காங்கிரீட் பூங்கா வாக மாறுவதைத் தடுக்க முடிய வில்லை. இதற்கு, அரசு அதிகாரி களின் மெத்தனப்போக்கே முதன்மை காரணமாக இருந்து வரு கிறது. கடந்த எம்.ஜி.ஆர் ஆட்சியின்  போது, மழை நீர் வடிந்து செல்லும்  வகையில், உதகை நகரின் மைய  பகுதியின் கோடப்பமந்து கால் வாய் அமைக்கப்பட்டது. தற் போது இந்த கால்வாய் எவ்வித பரா மரிப்புமின்றி உள்ளது. இதனால் சேறும், சகதியும் நிறைந்துள்ளது.  மேலும், நகரில் இருந்து வெளியேற் றப்படும் கழிவுநீர் முழுவதும் இந்த  கால்வாயில் கலக்கிறது. இதனால்,  பல்வேறு விதமான தொற்று நோய் களை பரப்பிக் கொண்டு வரு கிறது. மேலும், உதகைக்கு வரும்  முக்கிய சாலையாக மேட்டுப் பாளையம் சாலை உள்ளது. இந்த  சாலை பல ஆண்டுகளாக செப் பனிட படாமல் குண்டும், குழியுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள்  பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.  எனவே, கட்டடங்களை வரை முறைப் படுத்த வேண்டும். சாலை களை செப்பனிட வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.