அவிநாசி, மார்ச் 24- அவிநாசி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடிக் கப்பட்ட கற்களை, தனிநபர் எடுத்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள பழங்கரை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் நடராஜ், விசிக மாவட்டச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வட்டார வளர்ச்சி அதி காரி விஜயகுமாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, அவிநா சிலிங்கம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள வகுப்பறை இடிக்கப்பட்டு, புதிதாக கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இடிக்கப்பட்டு இருந்த கட்டி டத்தின் கற்களை, தனிநபர் ஒருவர் வார்டு உறுப்பினரின் உதவியோடு எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல பச்சம்பாளையம் முதல் தேவம்பாளை யம், செல்லும் சாலை வரை நமக்கு நாமே திட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை அமைக்கும்போது வரு கின்ற மண்ணை ஒரு புறத்தில் குவிய லாக சேமித்து வைத்துள்ளனர். இம்மண் ணையும் வார்டு உறுப்பினரின் உதவி யோடு, அந்த நபர் எடுத்துச் சென்றுள் ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத் தப்பட்டுள்ளது.