districts

விபத்தில் தூய்மைப்பணியாளர் பலி

கோவை, மார்ச் 18- விபத்தில் பலியான தூய்மை பணியாளர் உடலை வாங்க  மறுத்து சக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக உள்ள சித்ரா(48) என்பவர் பணிக்கு  வரும்போது தனியார் வாகனம் மோதி சம்பவ இடத்தில்  உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக  எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது  குடும்பத்தினர், சமூக நீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு  போராட்டம் மேற்கொண்டனர். உயிரிழந்த சித்ராவின் குடும் பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்தனர்.