இளம்பிள்ளை, மே 22-
இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட பகு திகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழைக்கு மின்கம்பங்கள், செல்போன் டவர், குடிசை வீடுகள், நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சேமடைந்தன.
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கணசாலை நக ராட்சி பகுதியில் ஞாயிறன்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப் பொழுது மின் கம்பங்கள், செல்போன் டவர், குடிசை வீடுகள், மரங்கள் மற்றும் நூற்றுக் கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப் பட்டது.
மேலும், மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து வருவாய்த் துறையினர் கணக்கெ டுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மழையினால் சேத மடைந்த வாழை மரங்களுக்கும், குடிசை வீடு களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.