districts

போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து வழக்குப்பதிவு செய்வதை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 2- ஜனநாயகரீதியில் நடைபெறும் போராட்டங்களுக்கு காவல்துறை அனு மதி மறுத்து வழக்கு பதிவு செய்வதைக்  கைவிட வேண்டும் என கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. கலைசெல்வனிடம் சிபிஎம் சார்பில் மனு  கொடுக்கப்பட்டது.  இந்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத்தில் சமீப காலமாக ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஆர்ப் பாட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வழக்கு பதிவு செய்வது அதிக ரித்து வருகிறது. பாலக்கோடு அருகிலுள்ள ஒரு தனி யார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி  முகாம் நடைபெற்றது. மாநில அரசின் வழிகாட்டுதலுக்குப் புறம்பான இச்செய லைக் கண்டித்து சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல்  அலுவலகம் எதிரில் ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தொப்பூர் பகுதியில் தலித் இளைஞர்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 13 ஆம் தேதி சிபிஐ (எம்) கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஒன்றிய அரசின் அக்னி  பாத் திட்டத்தை எதிர்த்து ஜூன் 22 ஆம்  தேதி சிபிஎம் நடத்திய ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுத்து,

கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்பர், சட்டம் ஒழுங்கு  பாதிக்கப்படும் என்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது எனக் காவல் துறை நோட்டீஸ் குறிப்பிடுகிறது. கடந்த ஆட்சி யில் கொரோனாவைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி அனுமதி மறுக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டங்களில் சட்டம்-ஒழுங்கு எவ்விதத்திலும் பாதிக்கப்படு தில்லை. ஜனநாயக ரீதியாக நடை பெறும் போராட்டங்களைத் தடை செய் வது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு மாறானதா கும். எனவே, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கிட வும், போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் அ.குமார் உள் ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்துகிறோம். என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலை செல்வனிடம் வழங்கினர்.