districts

நெசவாளர்களின் துயர வாழ்வுக்கு விடிவு எப்போது?

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம்  தேதி, அகில இந்திய கைத்தறி நெச வாளர் தினமாக கொண்டாடப்படு கிறது. கைத்தறி துணியை அனைவ ரும் உடுத்த வேண்டும் என்ற அரசுத் தரப்பு வேண்டுகோளோடு அன் றைய தினம் கடந்து போகிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஜவுளி துறையின் கீழ்  உள்ள கைத்தறி தொழில் ஜிஎஸ்டி  வரிவிதிப்பு, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரிபேட்  வராதது, இதனால் கூட்டுறவு சங் கங்கள் கடனில் மூழ்கும் அபாயம், தனியார் நெசவாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் கூலி உயர்வு  இல்லாத நிலை, கைத்தறி துறைக்கு  ஒதுக்கீட்டு சட்டத்தை முழுமையாக  அமலாக்காமல் இருப்பது, பட்டு நூல் விலையை தாறுமாறாக உயர்த்துவது, ஜவுளி உற்பத்தியா ளர்கள் வாரத்திற்கு இரண்டு சேலைக்கு மட்டும் கைத்தறி நெச வாளர்களுக்குப் பாவு நூல் வழங்கு வது என்று எண்ணற்ற கொடுமைக ளால் கைத்தறி தொழில் சீரழிந்து வருகிறது. ஒன்றிய, மாநில ஆட்சியாளர் கள் பின்பற்றும் பெருமுதலாளி களுக்கு ஆதரவான தாராளமயக் கொள்கைகளால் முதலில் விவசா யத்தை நெருக்கடிக்குள் தள்ளினார் கள். அத்துடன் பாரம்பரிய தொழில் களை, கைவினைத் தொழில்களை சீரழிவுக்குள் தள்ளி விட்டார்கள். அதன் ஒரு பகுதியாகவே இந்தி யாவின் பெருமை மிகுந்த பாரம்பரி யம் மிக்க கைத்தறித் தொழிலும், கைத்தறி நெசவாளர்களும் இன்று  கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து  வருகின்றனர். கைத்தறித் தொழிலா ளிகளைப் பற்றிய ஆய்வுகள் எது வும் அரசிடம் இல்லை. கைத்தறி தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியம் மிகச்சொற் பமே ஆகும். மாதம் ரூ.8ஆயிரம் மட் டுமே ஊதியமாகப் பெறக்கூடிய நிலைமைதான் இருக்கிறது. அரிசி  உள்ளிட்ட என அனைத்துக்கும் வரி மேல் வரி. இந்த வரிகளைக்  கட்ட இயலாமல் இன்று கைத்தறி  நெசவாளர்கள் பலர் வேறு தொழில் களை நோக்கிச் சென்றுக் கொண்டி ருக்கிறார்கள். கைத்தறிதொழிலை விட்டே பல குடும்பங்கள் வெளியே றிவிட்டன. 60 வயது முதிர்ந்த கைத தறி நெசவாளருக்கு பென்சன் இல்லை. காப்பீடு திட்டம் இல்லை.  நெசவாளர்களுக்கு தறியுடன் கூடிய வீடு இல்லை. இது சம்பந்த மான எந்த விதமான திட்டமும் அரசிடம் இல்லை.  நெசவுத் தொழிலாளர் சட்டங் கள் முறையாக அமலாவது இல்லை. கைத்தறி நெசவாளர்க ளுக்கு வங்கிக் கடன் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஒன்றியஅரசு ஏற்கனவே அறி வித்திருந்த ரூ.10 லட்சம் முந்த்ரா லோன் என்பதை தற்சமயம் நிதிநிலை அறிக்கையில் ரூ.20 லட்சம் என்று உயர்த்தி அறிவிக்கப் பட்டிருக்கிறது. கைத்தறி நெசவா ளர்கள் ரூ.10 லட்சம் என்றாலே பெற முடியாத நிலையே இருந்து வருகிறது. வெறும் ஏட்டுச் சுரைக்ச்s க்காயாக மட்டுமே இந்த  உத்தரவு உள்ளது. இதுவும்கூட சாதாரண கைத்தறியாளர்களைக் கைவிட்டு, பெரும் நிறுவனங்க ளுக்கு மட்டுமே பயன்படலாம். எனவே ஆகஸ்ட் 7ஆம் தேதி கைத்தறி தினத்திலாவது மாநில, ஒன்றிய ஆட்சியாளர்கள் கைத்தறி துணிகளின் மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி துறைக்கு ரக ஒதுக்கீடு சட்டத்தை முறையாக உருவாக்கி அமலாக்க வேண்டும். 60 வயது முதிர்ந்த கைத்தறி நெசவாளருக்கு ஓய்வூதி யம் முறையாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை  உடனடியாக கைத்தறி நெசவாளர் களுக்கு அமலாக்க வேண்டும். கனவாகவே உள்ள தறிக்கூடத் துடன் கூடிய வீடுகளை கைத்தறி  நெசவாளர்களுக்குக் கட்டித்தர வேண்டும். கைத்தறி நெசவாளர் களின் மேற்கண்ட அடிப்படையான கோரிக்கைகளோடு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கைத்தறி நெசவாளர் தினத்தை கொண்டாடுவோம்; ஒன்றிய, மாநில ஆட்சியாளர் களின் கவனத்திற்கு கொண்டு செல் வோம். என்.கனகராஜ் , மாவட்டச் செயலாளர், சிஐடியு திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கம்