districts

img

புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக  செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடை

புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக  செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகளை எவ்வித முன் அறிவிப்புமின்றி புஞ்சை புளியம்பாட்டி நகராட்சி நிர்வாகம்  அகற்றியது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  ப.மாரிமுத்து, ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, ஆர். விஜயராகவன், சி.முருகேசன் மற்றும் பவானிசாகர் கமிட்டி செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.