சேலம், ஜூன் 13- சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் மீது, 500 பக்க ஆவணங்கள் கொண்ட புகார் மனு அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 500 பக்க ஆவணங்கள் கொண்ட புகார் மனுவானது, மாநில ஆளுநர், தமிழ்நாடு முதல்வர், உயர்கல்வி ெயலாளர் ஆகியோர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக தொழிலா ளர்கள் சங்கத்தினர் கூறுகையில், துணைவேந்தர் ஜெகநாதன் தனது பணிக்காலத்தில் முன்னாள் பதிவா ளர், கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த தங்கவேல் உள்ளிட்டோரு டன் கூட்டு சேர்ந்து ஊழல் முறை கேடுகள், விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படை யில், தமிழக அரசு ஐஏஎஸ் அதி காரி பழனிசாமி தலைமையில் உயர் மட்ட விசாரணை குழுவை அமைத் தது. அக்குழுவினரின் விசாரணைக் குப் பிறகு துணைவேந்தர் ஜெகநா தன், முன்னாள் பதிவாளர் தங்க வேல், தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட தாக விரிவான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட துணைவேந் தர் ஜெகநாதன், முன்னாள் பதிவா ளர் தங்கவேல், பெரியசாமி மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துணைவேந் தருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை விவரங் கள், இதுநாள் வரை ஆட்சிக்குழு வின் கவனத்திற்கு கொண்டு வரப் படவில்லை. இது முழுக்க முழுக்க துணைவேந்தரின் அதிகார அத்து மீறலாகும். பழனிசாமி குழுவின் அறிக்கையின்படி, குற்றச்சாட்டு கள் நிரூபிக்கப்பட்ட முன்னாள் பதி வாளர் தங்கவேலை பணியிடை நீக் கம் செய்ய தமிழ்நாடு அரசு அறிவு றுத்தியது. ஆனால், துணைவேந் தர் அரசின் அந்த கடிதங்களை புறந் தள்ளி தங்கவேலுக்கு பணி ஓய்வ ளித்து, ஓய்வூதியப் பலன்கள் மற் றும் ஓய்வூதியம் வழங்கவும் உத்தர விட்டுள்ளார்.
இது விதிமீறல் மட்டு மல்ல, அதிகார துஷ்பிரயோகம் ஆகும். எனவே, முன்னாள் பதிவா ளர் தங்கவேல் மீது அரசு அறிக் கையின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 20 நாட்களில் பணிக்காலம் முடிய உள்ள துணை வேந்தர் ஜெகநாதன், எந்த வகையி லும் கொள்கை முடிவுகளை எடுக் கக் கூடாது என்பதனை ஆட்சிக்குழு விற்கு அறிவுறுத்த வேண்டும். பெரியார் பல்கலைக்கழக சாசன விதிப்படி, ஆட்சிக்குழு அதிகாரம் படைத்த அமைப்பு ஆகும். துணை வேந்தருக்கு என தனி அதிகாரம் எதுவும் கிடையாது.
எனவே, ஆட் சிக்குழுவை மதிக்காமல் தொடர்ந்து விதிமீறலிலும், அதிகார துஷ்பிர யோகத்திலும் ஈடுபட்டு வரும் துணை வேந்தரின் நடவடிக்கைகளை ஆட் சிக்குழு கட்டுப்படுத்த வேண்டும். அதிகார துஷ்பிரயோகத்தால் பல்கலைக்கழகத்தை நாசமாக்கிய துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது, என்ற னர்.