districts

img

திருப்பூரில் 2000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

திருப்பூர், செப். 14 – திருப்பூர் நகரின் மையப்பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண் டப்பட்டபோது முதுமக்கள் தாழி கிடைத் தது. இங்கு கிடைத்திருக்கும் முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடுகளும் இருக்கும் நிலையில் இது தொல்பொருள் துறையின ரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி  ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் தெரி வித்தார். இங்கு கிடைத்திருக்கும் முதுமக்கள் தாழி 2000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று வீரராசேந்திரன் தொல் லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத் தின் இயக்குநர் சு.ரவிக்குமார் தெரிவித் தார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 ஆவது வார்டு தாராபுரம் சாலையில் கே. எஸ்.சி. பள்ளி சாலைக்கு அருகில், குப்புசாமி புரம் இரண்டாவது வீதியில் குடிநீர் குழாய்  பதிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பள்ளம் தோன்டும் பணி வியாழக்கி ழமை மேற்கொள்ளப்பட்டது. சில அடிகள்  பள்ளம் தோண்டியபோது அங்கு பழங்கா லத்து முதுமக்கள் தாழி இருப்பது தென் பட்டது. உடனடியாக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு, முதுமக்கள் தாழி சேதா ரம் இல்லாமல் பத்திரமாக எடுக்கும் பணி நடைபெற்றது. இந்த தகவல் அறிந்து மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வை யிட்டார். மாநகராட்சி அதிகாரிகளும் உடன்  வந்தனர். அங்கு கிடைத்த முதுமக்கள் தாழி யில் மனித எலும்புகள் இருந்தன. இதைய டுத்து முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்த எலும்புகள் பாதுகாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய்  பதிப்பதற்காக பள்ளம் தோண்டும்போது முதுமக்கள் தாழி இருந்தது தெரியவந் தது, அவை பத்திரமாக பாதுகாக்கப்படும், அதில் எலும்புகள் இருப்பது கண்டறியப்பட் டுள்ள நிலையில் முதுமக்கள் தாழி மற்றும் அந்த எலும்புகள் வருவாய்த் துறையினர் முன்னிலையில் தொல்பொருள் துறையின ரிடம் ஒப்படைக்கப்படும் என்றார். தொல் பொருள் துறையினர் ஆய்வின் மூலம் இங்கு  கிடைத்திருக்கும் முதுமக்கள் தாழி எவ்வ ளவு காலம் பழமையானது என்பது தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

பெருங்கற்கால நினைவுச் சின்னம்

இது தொடர்பாக திருப்பூர் வீரராசேந் திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு  மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:  மனித வாழ்க்கையில் பிறப்பும், இறப்பும் இரண்டு முக்கியமான நிகழ்வுகள். தொல் பழங்கால மக்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந் தனர். இக்குழுக்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை வைத்திருந் தனர். அவை ஈமச்சின்னங்கள் என்று அழைக் கப்படுகின்றன. பொதுவாக பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டு உள்ளன. அவை 1. கற்பதுக்கை. 2. கல் திட்டை. 3. முதுமக்கள் தாழி, 4. நெடுங்கல் ஆகும். தற்போது நமக்கு இங்கு கிடைத்திருப்பது முதுமக்கள் தாழி  வகையைச் சேர்ந்த பெருங்கற்கால நினை வுச் சின்னமாகும். இது மண்ணால் செய்து சுடப்பட்ட பெரிய மண்கலம். இந்த மண்கலத் தில்மேலே சுடுமண்ணால் மூடி ஒன்றை வைத்து மூடியுள்ளனர். தாழியின் வாய் பாகத்திற்குக் கீழே அலங்காரக் கோடுகள் காணப்படுகின்றன. இதன் உள்ளே பண் டைய மனிதரின் எலும்புகள் மற்றும் அவர் கள் பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப் பட்ட பொருட்கள், இரும்பு கருவிகள் போன் றவற்றை வைத்து அடக்கம் செய்து விடு வார்கள்.  ஏற்கெனவே 2014ஆம் ஆண்டு கே.எஸ். சி.அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முது மக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. எனவே ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளாக நமது  நொய்யல் நதிக்கரையில் மனித இனம்  வாழ்ந்திருப்பதை இதன் மூலம் அறிய  முடிகிறது என்று சு.ரவிக்குமார் தெரிவித் தார். திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் கலைஞர் பேருந்து நிலையத்திற்கு மிக அரு கில்  பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய முது மக்கள் தாழி கிடைத்திருப்பது வியப்பை ஏற் படுத்தி உள்ளது. தொல்பொருள் துறையி னர் இது குறித்து உரிய ஆய்வு செய்து முழு மையான விபரங்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கூறி னர்.