districts

கார் மீது லாரி மோதி விபத்து 10 வயது சிறுமி உயிரிழப்பு

சேலம், ஜூன் 2- ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, நின்று கொண்டிருந்த கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 10 வயது சிறுமி  பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் வழியா சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் வெள்ளியன்று அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக வாகனங் கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. அப்போது புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு செல்வதற்காக சென்னை, மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஜோதிலட்சுமி ஐஸ்வர்யா (12), கீர்த்திகா (10), ஹரி மித்ரன் (5), திருநாவுக்கரசு (42),  தயாளன், தேவகி, லோகேஷ் உட்பட 9 பேரும் சென்ற கார்  போக்குவரத்தினர் நெரிசலில் சிக்கியிருந்தது. அப்போது,  பின்னால் வந்த டேங்கர் லாரி அங்கு நின்றுக் கொண்டிருந்த  காரின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில்,  காரிலிருந்த ஏழுமலை (33), அவரது மனைவி ஜோதிலட்சுமி,  குழந்தைகள் கீர்த்திகா (10) ஆகிய 3 பேரும் காயமடைந் தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள், காயமடைந்த வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே படுகாயமடைந்த கீர்த்திகா (10) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் சிறுமி யின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  காயமடைந்த மற்றவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆத்தூர் ஊரக  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ  வீரர் வேல்முருகன் தனது குடும்பத்தார் 9 பேருடன் கோவை யில் உள்ள ஈஷா மையத்தை நோக்கி காரில் சென்று கொண்டி ருந்தார். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளியன்று அதிகாலை வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்புற மாக இருக்கும் மரத்தில் மோதியது. இந்த விபத்தில்  கிருத்திகா என்ற 11 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவிநாசிபாளையம்  போலீசார் சிறுமியின் உடலை மீட்டதுடன், படுகாயம டைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். காரில் பயணித்த மற்ற 8 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.