districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.9 கோடியில் விளையாட்டு மைதானம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர், ஜூன் 10 – திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.9  கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் திறந்தவெளி விளையாட்டு  அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விளையாட்டு அரங்கில் தரை தளத்தில் உபகரண அங்காடி அறை, உடற்பயிற்சி அறை, பணியாளர்கள் அறை,  விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை  வசதிகள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் முதல் தளத்தில்  1050 பேர் அமரும் வசதியுடன் பார்வையாளர் அரங்கம், மாற் றுத்திறனாளிகள் முதல் தளம் சென்று வருவதற்கு தனியாக  சாய்தளம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்  400 மீட்டர் ஓடுதளமும், கால்பந்து மைதானமும் திறந்தவெளி  விளையாட்டு அரங்கங்கில் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது டன், திருப்பூர் சோமனூர் செல்லும் சாலையில் வஞ்சிபாளை யம் இடையே கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணி களையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சாலை பணியாளர் சங்க காங்கேயம் உட்கோட்ட மாநாடு

திருப்பூர், ஜூன் 10- தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங் கம் காங்கேயம் உட்கோட்ட 8 ஆவது மாநாடு காங்கேயம்  நெடுஞ்சாலை துறை வளாகத்தில் சனியன்று நடைபெற் றது.  காங்கேயம் உட்கோட்ட தலைவர் பி.கணேசன் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில்,  உட்கோட்ட துணைத் தலை வர் கே.துரை வரவேற்றார். கோட்ட இணைச்செயலாளர் வி.எஸ் செல்வராஜ் துவக்கி வைத்து பேசினார். உட் கோட்ட செயலாளர் ஆர்.முத்துசாமி, உட்கோட்ட பொருளா ளர் பி.செல்வதுரை ஆகியோர் அறிக்கை முன் வைத்தனர்.  மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.சக்திராணி மற்றும்  ஜெ.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கோட்டப் பொருளா ளர் ஆர்.கருப்பன், கோட்டத் தலைவர்  எஸ்.அண்ணாத்துரை,  கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் ஆகியோர் சிறப்புரையாற் றினர்.  இதில், இறந்த சாலை பணியாளர்களுக்கு விதிமுறை களை தளர்த்தி வாரிசு பணி வழங்கிட வேண்டும், முடக்கப்பட்ட  பஞ்சப்படி, சரண் விடுப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க  வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. முடிவில் உட்கோட்ட துணை செயலாளர் மோகன்ராஜ்  நன்றி கூறினார்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 10 - நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீட்டு இணைப்பில் குடிநீர் வழங்க வலி யுறுத்தி வாலிபர் சங்கத்தினர் உதவி ஆனையாளரிடம் வெள்ளியன்று  மனு  அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி, 1 ஆவது  வார்டுக்குட்பட்ட பிரியங்கா நகர் பகுதி யில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரு கின்ற குடிநீரை முறைப்படுத்தி, நான்கு  நாட்களுக்கு ஒரு முறை வீட்டு இணைப் பில் வழங்க வேண்டும். முறையான தார்ச்  சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை வெள்ளியன்று இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  உதவி ஆணையாளரை சந்தித்து அளித் தனர். இந்நிகழ்வில், வாலிபர் சங்க ஒன் றிய தலைவர் ரேவந்த் குமார், ஒன்றிய  செயலாளர் சந்தோஷ், துணைச் செய லாளர் நரேந்திர பிரசாத், ஒன்றியக்குழு  உறுப்பினர் ராஜசேகர், கிளை நிர்வாகி அருண் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

திருப்பூர், ஜூன் 10 - திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வில், 1625  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 323  வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளன. திருப்பூர் மாவட் டத்தில் உள்ள நீதிமன்றங்க ளில் 7 அமர்வுகளாக சனி யன்று சிறப்பு மக்கள் நீதி மன்ற நிகழ்வு நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை யேற்று சிறப்பு மக்கள் நீதிமன் றத்தை துவக்கி வைத்தார். 323 வழக்குகளுக்கு தீர்வு  காணப்பட்டதில், 17 கோடியே  71 லட்சத்து 7 ஆயிரத்து 67  ரூபாய் மதிப்புள்ள இழப்பீ டுகள் பெற்றுக் கொடுக்கப் பட்டிருப்பதாக நீதிமன்ற செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அணைகளின் நிலவரம்

அமராவதி அணை நீர்மட்டம்: 66.18/90அடி.நீர்வரத்து:156கனஅடி

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:24.95/60அடி நீர்வரத்து:1கனஅடி

48 பேருக்கு வீட்டுமனை பட்டா

திருப்பூர், ஜூன் 10 – திருப்பூர் மாவட்டம், காங் கேயம் வட்டம், சம்மந்தம்பா ளையம் பிரிவு தனியார் மண் டபத்தில் நடைபெற்ற நிகழ் வில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் 48 பேருக்கு விலை யில்லா வீட்டுமனைப் பட் டாக்களை வழங்கினார். இதன் மதிப்பு ரூ.22 லட்சத்து  99 ஆயிரத்து 335 என வரு வாய்த்துறையினர் தெரிவித் துள்ளனர்.

கொள்முதல் விலை உயருமா? தேயிலை விவசாயிகள் கவலை

உதகை, ஜூன் 10- பசுந்தேயிலை சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை உயராமல் உள்ளதால் விவசாயி கள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான நிலப்பரப்பில் தேயிலை பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கோத்தகிரி பகுதியில் உறைப்பனி பொழிவு  காணப்படும். இதன் காரணமாக தேயிலைத் தோட்டங்களில் கொழுந்துகள் கருகி பசுந்தேயிலை சாகுபடி பாதிக்கப்படும். பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளைப் பாதுகாக்க விவசாயிகள் தேயிலைச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சியும், சருகுகளை செடிகளின் மேல் பரப்பியும் பாதுகாப்பது வழக் கம். ஆனால், இந்த ஆண்டு கோத்தகிரி பகுதியில் பனிக்காலத் தில் உறைப்பனியின் தாக்கம் அதிகளவில் காணப்பட வில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக கோத்த கிரி பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன், போதிய சூரிய வெளிச்சத்துடன், இதமான கால நிலை நிலவி வருவதால் தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு வளர்ந்து, பசுந்தேயிலை சாகுபடி வெகுவாக அதிகரித்து வருகிறது. தேயிலைத் தோட்டங்களில் கொழுந்துகள் நன்கு வளர்ந்துள்ளதால், தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வரு கின்றன. சாகுபடி அதிகரித்து வந்தாலும் கொள்முதல் விலை  உயராமல் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ள னர்.

நாளை நீலகிரியில் மின்தடை

உதகை, ஜூன் 10- நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் வில்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உப்பட்டி,  சேரம்பாடி ஆகிய துணை மின் நிலையங் களில் திங்களன்று (நாளை) மாதாந்திர  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு கிறது. இதனால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  இந்த துணை மின் நியைங்களை சேர்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. உப்பட்டி துணை மின் நிலையத்திற் குட்பட்ட உப்பட்டி, பொன்னாணி, தேவாலா,  பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லாமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக் வுட், அய்யன்கொல்லி, வுட் பிரேர் மற்றும் நம்பர் 3 டிவிசன் ஆகிய பகுதிகளில் அன்றைய  தினம் மின் விநியோகம் இருக்காது. மேலும்,  சேரம்பாடி துணை மின்நிலையத்திற்குட்பட்ட சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுன்னி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரா, கக்குண்டி மற்றும்  சோடாடி ஆகிய பகுதிகளிலும் திங்களன்று (நாளை) மின் விநியோகம் இருக்காது.

அரசு கல்லூரியில் நேரடி சேர்க்கை

ஈரோடு, ஜூன் 10- மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்களன்று (நாளை)  நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர், கனகமலை அருகில் அமைந்துள்ள மொடக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்களன்று நடைபெற உள்ளது. இதில் பிஎஸ்சி கணிணி அறிவியல், கணிதம், விலங்கியல், பி.காம் வணிகவியல், பி.காம்.சிஏ,  வணிகவியல் கணிணி பயன்பாடு, பிபிஏ சிஏ, வணிக நிர்வாக வியல் கணிணி பயன்பாடு, தமிழ் மற்றும் ஆங்கில மொழி  பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறும். இணைய வழியில் விண்ணப்பித்து சேர்க்கை பெறாதவர்கள் இதில்  கலந்து கொண்டு பயனடையலாம். ஜூன் 14 ஆம் தேதியன்று  அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான கலந்தாய்வு நடை பெறும். இணையவழியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரடியாக விண்ணப்பம் பெற்று காலியாக உள்ள இடங் களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேரலாம்.

சமரச தீர்வு மையம் மூலம் இழப்பீடு வழங்கல்

சேலம், ஜூன் 10- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில், சமரச தீர்வு மையம் மூலம் ரூ.1 கோடியே 13 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு சனி யன்று வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம்  எனும் மக்கள் நீதிமன்றம் மாதந்தோறும் முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச  தீர்வு மையம் நடைபெற்றது. இதில் குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்சனை உள் ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காணப் பட்டன. அதன்படி, கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாகப் பிரிவினை வழக்கில் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து பழனியம்மாள், லீலா, பழனி உள்ளிட்ட ஆறு பேருக்கு ரூ.42 லட்சம் மதிப் புள்ள சொத்தை பிரித்து மாவட்ட முதன்மை  நீதிபதி சுமதி வழங்கினார். இதேபோல, சங்கர் கணேஷ் (44) என்ப வர் சேலத்திலிருந்து கோவை வழியாக காரில்  சென்று கொண்டிருந்தார். அப்போது பழங் கரை நரிக்குறவர் காலனி மேம்பாலம் அருகே  லாரி மோதி உயிரிழந்தார். இந்த வழக்கில் நேசனல் காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.29  லட்சத்து 33 ஆயிரத்திற்கு தீர்வு காணப் பட்டது. ஒரே நாளில் நான்கு வழக்குகளில் ரூ.1 கோடியே 13 லட்சத்திற்கு இழப்பீட்டு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி  வழங்கினார்.