districts

img

மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயன் பாரூகின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயன் பாரூகின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் பதிப்பகத்தில், சனியன்று நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு திராவிட சுயமரியாதை கழக நிர்வாகி நேருதாஸ் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிட கழகம் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம், ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் மணிவண்ணன் நன்றி கூறினார். முன்னதாக, இந்திய முற்போக்கு கூட்டியக்க இயக்கத் தலைவர் யு. கலாநாதனின் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.