தருமபுரி, மே 30- அதியமான்கோட்டை அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதா? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே திறந்தவெளி நெல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. தஞ் சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் இருந்து கொள் முதல் செய்யப்படும் நெல் மூட்டை கள் சரக்கு ரயில் மூலம் தரும புரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங் கிருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு திறந்தவெளி நெல் கிடங் கிற்கு கொண்டு செல்லப்படுகின் றன. அங்கு இருப்பு வைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு அரவை செய்யப்பட்ட பின்னர் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், அதியமான் கோட்டை அருகே உள்ள நெல் கிடங் கிற்கு கடந்த சில மாதங்களில் 22 ஆயிரம் டன் நெல் கொண்டு வரப் பட்டதாகவும், அதில் 7 ஆயிரம் டன் இருப்பு குறைவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக அதிகாரி கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத் தில் 80க்கும் மேற்பட்ட நெல் அரவை ஆலைகள் உள்ளன. அதியமான் கோட்டை அருகே உள்ள திறந்த வெளி நெல் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல்லை அள வீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள் ளது. முதற்கட்டமாக 7 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பப்பட்டுள் ளது. இங்கு இருப்பு வைக்கப்பட் டுள்ள நெல் மூட்டைகளை முழுமை யாக அரவைக்கு அனுப்பும் போது இருப்பு குறைந்துள்ளதா? என்பது தெரிய வரும். அப்படி இருப்பு குறைந் திருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.