districts

img

பவானியாற்றில் சிக்கிய மாணவர்கள் 7 பேர் மீட்பு

மேட்டுப்பாளையம், நவ.25- பவானியாற்றில் குளிக்க வந்த போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள் ளப்பெருக்கில் சிக்கி உயிருக்கு போராடிய 7 பேரை தீயணைப்பு துறையினரால் பரிசல்கள் உதவி யுடன் மீட்டனர். கோவை மாநகரிலுள்ள பீள மேடு பகுதியை சேர்ந்த சிரஞ்ஜிவி (18), அதேபகுதியைச் சேர்ந்த  ரவிக் குமார் (19), சரவணன் (22), சதீ்ஸ் குமார் (23), கணேஷ்குமார் (21),  சஞ்ஜய் (21), மணிகண்டன் (18) என 7 பேரும் வியாழனன்று மாலை தங் களது இரு சக்கர வாகனங்கள் மூலம் பவானியாற்றில் குளிக்க மேட்டுப்பாளையம் வந்துள்ளனர். இங்குள்ள நெல்லித்துறை பகுதி குண்டுக்கல்துறை என்றழைக்கப் படும் இடத்திற்கு சென்ற இவர்கள்  அங்கு ஓடும் பவானி ஆற்றில்  இறங்கி குளித்து விளையாடியுள்ள னர்.

இருள் சூழ்ந்து இரவு நேரமாகி யும் கரைக்கு திரும்பாமல் உற்சாக மாக ஆற்றில் விளையாடி கொண்டி ருந்தபோது, இரவு 8 மணியளவில் பில்லூர் அணையில் இருந்து நீர் மின் உற்பத்தி பணிக்காக ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கான வெள்ள அபாய எச்ச ரிக்கை அறிவிப்பு குறித்து தெரியா மல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள் ளப்பெருக்கில் சிக்கி கொண்டனர். நீர்வரத்தின் வேகம் அதிகரிக்கவே ஆற்றின் நடுவே இருந்த ஒரு மண் திட்டிற்கு சென்ற ஏழு பேரும் அங் கிருந்த மரத்தின் மீதேறி உயி ருக்கு போராடியுள்ளனர். தங்களை காப்பாற்றும் படி உதவி கோரி அலறியுள்ளனர்.  இதனை கேட்ட உள்ளூர் கிராம  மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தக வல் தெரிவித்தனர். இதனைய டுத்து தீயணைப்புத்துறை மீட்பு  படையினர் பரிசல்கள் மூலம் ஆற் றின் நடுப்பகுதிக்கு  சென்று, கயிறு களை கட்டி வெள்ளத்தில் சிக்கி கொண்ட 7 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதன்பின்னர் மேட்டுப் பாளையம் வட்டாட்சியர் மாலதி, தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்கப்பட்டவர் களுக்கு அறிவுரை கூறி, இவர்க ளது பெற்றோர்களுக்கு தகவல் தெரி வித்து அனுப்பி வைத்தனர். இதேபோல் கடந்த மாதம் மூன்று  கல்லூரி மாணவர்கள் பவானியாற் றில் அடித்து செல்லப்பட்டு உயிரி ழந்த நிலையில், மீண்டும் ஏழு பேர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண் டது இப்பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியது.