districts

img

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 64 குழுக்கள் அமைப்பு

திருப்பூர், மார்ச் 18 - அரசு அலுவலகங்கள், வளாகங்க ளில் அரசியல் கட்சி விளம்பரங்கள் 24  மணி நேரத்திற்குள்ளும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொது வளாகங்கள் மற்றும் உள்ளாட்சி கட்டி டங்களில் 48 மணி நேரத்திலும், தனியார்  வளாக கட்டிடங்களில் அரசியல் கட்சி  விளம்பரங்கள் 72 மணி நேரத்திற்குள் ளும் அழித்து அகற்றப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் உட்பட கிளை அலுவலகங்களிலும் கட் சியின் சின்னம் மறைக்கப்பட வேண் டும். கட்சிக் கொடி, கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். அரசியல் தலைவர்களின் சிலை கள் திரையிட்டு மறைக்கப்பட வேண் டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநக ராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் தனி யார் சுவரிலும், உரிமையாளர்கள் அனு மதித்தாலும் கூட சுவர் விளம்பரங்கள் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. கிராம ஊராட்சி பகுதிகளில் தனியார் உரி மையாளர்கள் அனுமதி பெற்று சுவர்  விளம்பரங்கள் செய்து கொள்ளலாம். அனைத்து அரசியல் கட்சிகளும் தேர் தல் நடத்தை விதிகளை அமலாக்க ஒத் துழைப்பு வழங்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும்  அலுவலர் த.கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் பிரச்சார நிகழ்வுகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  குறித்து மாவட்ட ஆட்சியர் கூறினார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், வாகன அனு மதி, ஒலிபெருக்கி அனுமதி ஆகிய அனைத்தும் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண் டும். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 48 மணி  நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்க  வேண்டும். முதலில் விண்ணப்பிப்போ ருக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் செலவு தொடர்பாக  விலைப்பட்டியல் முன்மொழியப்பட் டது. சந்தை விலை நிலவரத்திற்கு ஏற்ப  அனைத்து தரப்பினரின் ஆலோசனை பெற்று இந்த விலைபட்டியலை இறுதி  செய்யலாம் என்று ஆட்சியர் தெரி வித்தார். இதில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, பாஜக, ஆம் ஆத்மி உள் ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங் கேற்றனர். மாவட்ட ஆட்சியர் உடன் மாநகர  காவல் ஆணையர் பிரவீன் குமார் அபி னபு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், சார் ஆட்சியர் சௌமியா  ஆனந்த் உள்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 64  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவ லர் த.கிறிஸ்துராஜ் கூறினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும்  தேர்தல் நடத்தும் அலுவலர் த. கிறிஸ்து ராஜ் திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:

பறக்கும் படை

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அம லுக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 8  சட்டமன்றத் தொகுதிகளுக்கு, தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 நிலை யான கண்காணிப்பு குழு மற்றும் 2 வீடியோ  கண்காணிப்பு குழுக்கள் என்ற விதத்தில்  மொத்தம் 64 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர் தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புகார் தெரிவிக்க..
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் 1800 425 6989 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.அத்துடன்  தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட் டுள்ள cVIGIL செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாம். தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர் பான புகார்கள் பெறப்பட்டவுடன் சம்பந்தப் பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண் காணிப்பு குழு கவனத்திற்கு கொண்டு செல் லப்படும். புகார் தெரிவித்து 100 நிமிடங்க ளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படை உள்ளிட்ட கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர்  அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில்  இருந்து முழுமையாக கண்காணிக்க முடி யும். இந்த மாவட்டத்தில் மொத்தம் 12,589  அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள் ளனர். அத்துடன் 4500 காவல் பணியாளர்கள்  தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர்.

மொத்த வாக்காளர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22  அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 11 லட் சத்து 50 ஆயிரத்து 110, பெண் வாக்காளர்கள்  11 லட்சத்து 94 ஆயிரத்து 358 மற்றும் மூன்றாம்  பாலினத்தார் 342 வாக்காளர்கள் என மொத் தம் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர் கள் உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 12 ஆயிரத்து760 பேர் உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் 30 ஆயிரத்து 70 பேர் உள்ளனர். 85 வயது கடந்த முதிய வாக்காளர்கள் 30 ஆயிரத்து 826 பேர் இருக்கின்றனர். வாக்குச்சாவடிகள் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் மொத் தம் 2520 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அதை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி 20 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணை யம் அனுமதி அளித்தவுடன் அந்த 20 துணை  வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 2520 வாக்குச்சாவடிகள் மொத்தம் 1062 வாக்குச் சாவடி மையங்களில் செயல்படும்.

பதட்டமான வாக்குச்சாவடிகள்

திருப்பூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் 318 உள்ளன. சட்ட மன்றத் தொகுதி அடிப்படையில் தாராபுரத் தில் 25, காங்கேயம் தொகுதியில் 37, அவி நாசி தொகுதியில் 25, திருப்பூர் வடக்கு  தொகுதியில் 95, திருப்பூர் தெற்கு தொகுதி யில் 75, பல்லடத்தில் 40, உடுமலைப்பேட் டையில் 14, மடத்துக்குளத்தில் 7 என மொத் தம் 318 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத் தப்படும். திருப்பூர் எம்பி தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். பெருந்துறை,  பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய  ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய  நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்கா ளர்கள் 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 பேர்,  பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 11 ஆயி ரத்து 718 பேர், மூன்றாம் பாலினத்தார் 250 பேர்  என 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ள னர். 694 மையங்களில் 1744 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன.