உதகை, ஜூன் 24- கீழ் கோத்தகிரி மற்றும் குன்னூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி களில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பி லான விவசாய கடன் வழங்கி மோசடி செய்ததாக வங்கியின் உதவி மேலாளர் உள்பட 13 பேரை குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வனத்துறை அதிகாரி, வங்கியின் முதுநிலை மேலாளர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கிசான் கேஸ் கிரீடிட் திட் டத்தின் மூலம் காளாண் வளர்ப்பு மற்றும் விவசாய கடன் வழங்கு வதாக கூறி, கீழ் கோத்தகிரி மற்றும் குன்னூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகளில் உதவி மேலாளராக இருந்த ஜெயராமன், முதுநிலை மேலாளர் அனூஜ் குமார் மற்றும் வனச்சரகர் கணேசன் ஆகியோர் 24 விவசாயி களிடம் நிலத்தின் ஆவணங்களை வாங்கி உள்ளனர். அந்த ஆவணங்களின் மூலம் 24 விவசாயிகளுக்கு 3 கோடியே 61 லட்சம் ரூபாயை கடனாக அவர் களது வங்கி கணக்கில் செலுத்தி யுள்ளனர். பின்னர், அந்த விவசாயி களிடமிருந்து கடன் தொகையை பணமாக பெற்று கொண்ட வங்கி மேலாளர்கள் மற்றும் வனச்சரகர் ஆகியோர் அந்த தொகையை கையாடல் செய்துள்ளனர். மானி யத்துடன் வழங்கபட்ட அந்த விவ சாய கடனை அந்த 24 விவசாயி களும் திருப்பி செலுத்தாத நிலை யில், கடன் தொகையை 2021-ஆம் ஆண்டு திருப்பி செலுத்துமாறு வங்கி நிர்வாகம் கேட்ட போது மோசடி அம்பலமானது. இதனை யடுத்து 2021-ஆம் ஆண்டு வங்கி நிர்வாகம் சார்பாக நீலகிரி மாவட்ட குற்ற பிரிவு போலிசாரிடம் புகார் அளிக்கபட்டது.
புகாரை பெற்று கொண்ட குற்ற பிரிவு போலிசார் சம்பந்தபட்ட விவ சாயிகளை நேரில் அழைத்து போலீ சார் விசாரணை நடத்திய போது மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அப்போ தைய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் உதவி மேலாளர் ஜெய ராமன் மற்றும் விவசாய கடனை பெற்று கடனை திருப்பி செலுத்தா மலும் வங்கி கணக்கில் செலுத்தப் பட்ட தொகையை பணமாக வங்கி மேலாளர் மற்றும் வனத்துறை அதி காரி ஆகியோருக்கு வழங்கியதாக கூறி கணேசன், பாபு, ஆல்துரை, ராமகிருஷ்ணன், ஜெயபால், சரவணன், மகேஷ், பிரியா, லதா என கீழ் கோத்தகிரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி வாடிக்கை யாளர்கள் 8 பேரும் குன்னூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக் கையாளர்கள் 5 பேரையும் நீலகிரி மாவட்ட குற்ற பிரிவு டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வங்கி உதவி மேலாளர் ஜெயராமன் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ள நிலையில், முதல் குற்றவாளியாகவும், அவருக்கு உதவிய முதுநிலை மேனே ஜர் அனுஜ்குமார் 2ஆவது குற்றவா ளியாகவும் விவசாயிகளுக்கு காளாண் வளர்ப்பு குறித்து ஆசை காட்டி மோசடியில் தள்ளிய முன் னாள் உதகை வனச்சரகர் கணேசன் 3 ஆவது குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளனர். அனூஜ் குமார் மற்றும் வனச்சரகர் கணேசன் உள்ளிட்ட 11 பேர் தலைமறைவாகி உள்ளனர்.