திருப்பூர், நவ. 25 – திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை யில் இருந்து விவசாயப் பாசனம் மற்றும் குடி நீர் தேவைக்காக சனியன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமையில் தண்ணீரை திறந்து விட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அம ராவதி அணை அமைந்திருக்கிறது. இந்த அணையின் மொத்த உயரமான 90 அடியில் தற்போது 81.73 அடிக்கு மேலாக நீர் நிரம்பி யுள்ளது. விநாடிக்கு 933 கன அடி நீர் வரத்து உள்ளது. இந்த நிலையில் விவசாயப் பாசனத் துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் சனி யன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 18 அமராவதி பழைய வாய்க்கால்க ளின் (இராமகுளம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் திருப்பூர் மாவட் டத்தில் 15ஆயிரத்து 936 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 451 ஏக்கர் ஆக மொத்தம் 29ஆயிரத்து 387 ஏக்கர் நிலங்க ளுக்கு 25 நாட்கள் தண்ணீர் திறப்பு, 12 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் அம ராவதி ஆற்று மதகு வழியாக 2376 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்ப டுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித் துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் புதிய பாசன நிலங்களுக்கு 21 நாட்கள் தண் ணீர் திறப்பு 16 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் அமராவதி பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கனஅடி வீதம் 798.34 மில்லியன் கன அடிக்கு மிகாம லும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆக மொத் தம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு, நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்ற பாச னத்திற்காக சனியன்று முதல் டிசம்பர் 31 ஆம் தேதி முடிய 37 நாட்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் பங்கீட்டுப் பணிகளில் அதிகா ரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், உடுமலை கோட் டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பொதுப்ப ணித் துறை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் அரவிந்தன், தீனதயா ளன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், உடும லைப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.