கோவை, டிச.24- தந்தை பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், அவ ரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.மூர்த்தி, கிழக்கு நகர செயலாளர் என்.செல்வராஜ், சிஐடியு ஆட்டோ சங்க துணைத்தலைவர் மாரி முத்து, கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்ச்சிக்கு, தீஒமு மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கரீம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுதா, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜோதி குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருகூர் கிளை சார்பில் பெரியாரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவஞானம் நினைவஞ் சலி உரை ஆற்றினார். கிளைச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் நினைவுநாள் உறுதிமொழி ஏற்றுக்கொள் ளப்பட்டது. இருகூர் பேரூராட்சி கவுன்சிலர் ஸ்டாலின் குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் குருசாரதி உட்பட் பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட்டம், பன்னீர்செல்வம் பூங்கா வில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் மற்றும் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் கழகம், திரா விடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்பின் சார்பில் பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.