கோவை, அக்.5- சிங்கப்பூரிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட் ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரி கள், 2 பேரை செய்தனர். கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை சோதனை செய்து பிடித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புல னாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிங் கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத் தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர் களது உடமைகளை தீவிர சோதனை செய்தனர். அதில் 2 பயணிகள் உள்ளா டைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகிய வற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2.94 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் பின் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி னர். அந்த விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ் ணன் (66) என்பது தெரியவந்தது. இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க் கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந் ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். இதன்பின், நீதிமன்றத்தில் முன்நிறுத்தி கோவை மத்திய சிறை யில் அடைத்தனர். மேலும், ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.