மேட்டுப்பாளையம், நவ.5- சிறுமுகை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான ஊழியரி டம் பட்டாக்கத்தியை காட்டி பட்டப் பகலில் பணம் பறிக்க முயன்ற வழிப் பறி கொள்ளையர்கள் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், சிறுமுகையை அடுத்த வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை யின் மேற்பார்வையாளராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகி றார். இவர் கடந்த அக்.31 ஆம் தேதி யன்று கடையின் விற்பனை தொகை யான ரூ.10 லட்சத்தை வங்கியில் செலுத்த தனது இருசக்கர வாகனத் தில் சென்றுள்ளார். அப்போது ஆலாங் கொம்பு வழியாக சாலையில் சென்ற விஜய் ஆனந்தை வழிமறித்த ஒரு கும்பல் அவரது வாகனத்தை மறித்து கீழே சாய்த்து விட்டு, பட்டாக்கத் தியை காட்டி பணத்தை வழிப்பறி செய்ய முயற்சி செய்தது.
பட்டப்பக லில் பலரும் செல்லும் சாலையின் நடுவே நடைபெற்ற இந்த கொள்ளை முயற்சியின் போது அவ்வழியே சென்றவர்கள் ஒன்று கூடியதால் பணத்தை பறிக்க முடியாமல் அக் கும்பல் தங்களது இருசக்கர வாக னங்களில் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிறுமுகை காவல் துறை யினர் நான்கு தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தீவி ரமாக தேடி வந்தனர். சில மாதங்க ளுக்கு முன்பு இதே டாஸ்மாக் ஊழி யரிடம் பணம் பறிக்க முயன்ற நபர்கள் மீண்டும் ஒரு வழிப்பறியில் ஈடுபட முயன்றுள்ளதாக சந்தேகமடைந்த காவல் துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கொள்ளையர் களை தேடி வந்தனர். இந்நிலையில், சனியன்று கோவையைச் சேர்ந்த சதீஸ்குமார் (20), சிவகங்கையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (21), லோக நாதன் (22), ஆகாஷ் (21), பட்டுக் கோட்டையைச் சேர்ந்த ரவிகண்ணன் (20) ஆகிய 5 பேரை கைது செய்த னர். இவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தி மற் றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட 5 பேர் மீது ஆயுதத்தை காட்டி கொலை மற்றும் கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்குகள் பதிவு செய் துள்ள காவல் துறையின், மேட்டுப் பாளையம் குற்றவியல் நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.