districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சந்தன மரம் வெட்டி கடத்தல் 5 பேர் கைது

உதகை, ஜூலை 22 - கோத்தகிரி அருகே சந்தனமரம் வெட்டி கடத்திய சம்ப வத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.2  லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு சரகத் துக்கு உட்பட்ட கூக்கல்தொரை, கம்பட்டி கம்பை பகுதியில்  இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் அடை யாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருப்பதாக  அந்தப் பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் வனத்துறைக்கு  தகவல் தெரிவித்தனர்.   இந்நிலையில், கூக்கல் தொரையில் இருந்து கம்பட்டி செல்லும் சாலையில் தனியார் பட்டா நிலத்தில் இரவு நேரத் தில் அடையாளம் தெரியாத நபர்கள் சந்தன மரம் வெட்டி யுள்ளனர்.  இது குறித்த தகவலின் பேரில் வனச்சரகர் செல்வக்குமார்  மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது  3 பேர் சந்தன மரத்தை வெட்டி துண்டுகளாக்கி கொண்டிருந் தனர். மேலும் வனதுறையினரை பார்த்து வெட்டப்பட்ட மர  துண்டுகளை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். அவர்களை வனத்துறையினர் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், குஞ்சப்பணை பகுதியை சேர்ந்த பால்ராஜ், சவுந்திரபாண்டியன், செல்வன் என்பது தெரிய வந்தது.  மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கூக்கல் தொரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தான் சந்தன மரம் அங்கிருப்பதை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பால்ராஜ் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட சந்தன  மரத்தை  வாங்குவதற்கு தயாராக இருந்த மேட்டுப்பாளை யத்தை சேர்ந்த ஜாகீர் உசேனும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவர்கள் 5 பேருக்கும் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் நீலகிரி மாவட் டத்தில் இது போல் சந்தன மரம் அல்லது பட்டியலிடப்பட்ட மரங்களை வெட்டி உள்ளார்களா? அவற்றை யாருக்காவது விற்பனை செய்து உள்ளார்களா? என்பது குறித்து வனத்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவர் களிடமிருந்து வெட்டப்பட்ட சந்தன மரக் கட்டைகள் மற்றும் மரம் அறுக்கும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை, ஜூலை 22- கோவை அருகில் மருத்துவ மாணவி கல்லூரி விடுதியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளை யத்தில் செயல்பட்டு வரும் ஆர்விஎஸ் தனியார் பல் மருத் துவக் கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த  சதாசிவம் என்பவரது மகள் சத்ய பிரியா பல் மருத்துவம்  பயின்று வந்தார். நான்காமாண்டு பயிலும் மாணவி சத்ய பிரியா. இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.  அவருடன் இரு மாணவிகள் தங்கி படித்து வந்துள்ளனர். சத்யபிரியா வெள்ளிக்கிழமை காலையிலிருந்து சோர்வான  மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி வகுப்புக்குச் சென்று விட்டு மதியம் உணவிற்காக விடுதிக்கு சென்று உள்ளார். பின்னர் மதிய வகுப்பிற்கு சத்ய பிரியா வராமல் இருந்துள்ளார். இதனால், சக மாணவிகள், சத்ய பிரியாவின்  செல்போன் எண்ணுக்கு அழைத்துள்ளனர். பல முறை  தொடர்பு கொண்டும் சத்ய பிரியா போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மாணவிகள் விடுதி அறைக்கு சென்று  பார்த்துள்ளனர். அப்போது கதவு உள்புறமாக தாளிடப்பட் டிருந்தது. இதனால், பின்பக்கமாக உள்ள ஜன்னல் வழி யாக பார்த்துள்ளனர் அப்போது சத்ய பிரியா துப்பட்டா வால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு  இறந்துள்ளார்.  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடன டியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர், சூலூர் காவல் நிலையத் துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு வந்த  காவல்துறையினர்  கதவை உடைத்து உள்ளே  சென்று மின்விசிறியில் தூக்கிட்டு இருந்த சத்ய பிரியா வின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்கு கோவை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் துணிக்கழிவுகள் அகற்றுக

தருமபுரி, ஜூலை 22- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவியல் குவியலாக கிடக்கும் துணிக்கழிவுகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாட்டின் முக்கி சுற்றுலாத் தல மாக ஒகேனக்கல் விளங்குகிறது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி  ஆற்றின் கரையோர பகுதிகளான முதலைப்  பண்ணை, நாகர்கோவில், பெங்களூர் ஜால்,  மாமரத்துக்கடவு பிரதான அருவி செல்லும்  நடைபாதை ஆகியவை உள்ளன. இந்நிலை யில், அருவியில் குளித்துவிட்டு தாங்கள் பயன்படுத்திய ஆடைகளை அப்படியே காவிரி ஆற்றில் வீசி செல்கின்றனர். இந்த ஆடைகள் ஆற்றில் அடித்துச் செல் லப்பட்டு பாறை திட்டுக்கள், கரையோரப் பகுதியில் உள்ள மரங்களின் வேர்களில் சிக்கி கொள்கின்றன. இதனால் ஆற்றின் பல் வேறு இடங்களில் துணிகள் குவியல் குவிய லாக மக்கிய நிலையில் கிடக்கிறது.  தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால், துணிகள் ஆங் காங்கே காணப்படுவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி உள் ளனர்.  எனவே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கும் துணிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பெண்ணிடம் பணம் பறிப்பு

கோவை, ஜூலை 22- இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோவை மோதி பெண்ணிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார்  தேடி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜோதி நகரை  சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி புஷ்பா(47). கூலி தொழி லாளி. இவர் சம்பவத்தன்று தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பேக்கரி  அருகே சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த  ஆட்டோ மொபட் மீது மோதியது.  இதில், நிலைதடுமாறி புஷ்பாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த 4  பேரில் ஒருவர் கீழே இறங்கி வந்து புஷ்பாவின் கைப் பையை பறித்து கொண்டு ஆட்டோவில் தப்பினர். கீழே விழுந்ததில் லேசான காயமடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதற்கிடையே பணம் அதிகம் இருக்கும் என கைப்பையை  பறித்த கும்பல் அதில் ரூ. 500 மட்டும் இருந்ததால் ஏமாற்ற மடைந்து பணத்தை எடுத்து விட்டு சிறிது தூரத்தில் கைப் பையை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.  இது குறித்து புஷ்பா சிங்காநல்லூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆட்டோவை மோத வைத்து  பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நகர மன்ற தலைவர் ஆய்வு

ஈரோடு, ஜுலை 22- பவானி அரசு மருத்து வமனையில் நகர் மன்றத்  தலைவர் சிந்தூரி இளங் கோவன் ஆய்வு மேற்கொண் டார். ஈரோடு மாவட்டம், பவானி அரசு மருத்து வமனையில் உள் நோயாளி களுக்கு வழங்கப்படும் உண வின் தரம் குறித்து பவானி நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது, உள் நோயாளிகளுக்கு உணவு எடுத்து செல்ல வசதியாக 2  ட்ராலிகள் வழங்கினார். மேலும், பாத்திரங்களை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள ஸ்லாப் கல் அமைக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தலைமை மருத்துவர் கோபாலகிருஷ்ணன்,   கவுன் சிலர்கள் விஜய் ஆனந்த், மோகன்ராஜ் மற்றும் திலக வதி சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

உதகை, ஜூலை 22- மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குன்னூரில் உள்ள கல்லூரியில் ஜூலை 25 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நீலகிரி  மாவட்டம், குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி யில் ஜூலை 25 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில்  தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி பகுதி களிலிருந்து 200க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவ னங்கள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு, நேரடி பணிக்காகவும் மற்றும் இளைஞர் திறன் வளர்ச்சி பயிற்சிக்கும் தகுதி வாய்ந்த ஆண்கள் மற்றும்  பெண்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, நீலகிரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற  பகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு முதல் பட்டய மேற்படிப்பு,  தொழில்நுட்ப கல்வி, நர்சிங், பார்மசி, ஐடிஐ மற்றும் டிப்ளமோ போன்ற கல்வி முடித்துள்ளவர்கள் தங்கள்  கல்வித்தகுதி மற்றும் அனுபவ சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். நேரடி வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு  பயிற்சியினை தேர்வு செய்து பயன் பெறலாம் என்று  மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

விரிவான பாலம் அமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 22 – பூமலூர் கிராமம் கிடாத்துறை யில் சாலை விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக 28 மீட்டர் நீளத்திற்கு  பாலம் அமைக்க கூடுதல் நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று சாமளா புரம் கிராம நீரினை பயன்படுத்து வோர் சங்கம் கோரியுள்ளது. வெள்ளியன்று பல்லடம் வட்டாட் சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் தலை மையில் நடைபெற்ற கோட்ட விவ சாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் இந்த  சங்கத் தலைவர் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: பல்லடம் முதல் பூமலூர் வரை  செல்லும் நெடுஞ்சாலை விரிவாக் கப்பணி நடைபெற்று வருகிறது. பூம லூர் கிராமம் கிடாத்துறையில் க.ச.324  காலையின் வழியாக பிஏபி கால்வாய்  கிழக்கு மேற்காக செல்கிறது. தெற்கு  வடக்காக நெடுஞ்சாலையும், பக் கத்து தோட்டப் பாதையும், தெற்கு  வடக்காக மழைநீர் செல்லும் ஓடை யும் உள்ளன. பிஏபி பாசனம் செல்ல  26 மீட்டர் நீளக் குழாய் பாலம் உள் ளது. பாலத்தைத் தாண்டி செல்கிற கால்வாய் மூலம் 3227 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. குறிப்பாக கிடாத்துறை, கிடாத்துறை புதூர், பள்ளிபாளையம், இச்சிப்பட்டி கிரா மம் பெத்தாம்பூச்சிபாளையம், சாம ளாபுரம் பேரூராட்சி வா.அய்யம்பா ளையம், காளிபாளையம், பரமசிவம் பாளையம், பெருமாம்பாளையம், கருகம்பாளையம் கிராமங்களும் இதன் மூலம் விவசாய பாசனம் மற் றும் குடிநீர் வசதி பெற்று வருகின்றன.  எனினும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் 10 மீட்டர் அளவுக்குத்தான் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. விரிவாக் கம் செய்யும் 2 மீட்டருடன் சேர்த்து  மொத்தம் 28 மீட்டர் நீளத்துக்கு பாலம்  அமைக்க வேண்டும். கூடுதல் நீளத் துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து தர  வேண்டும் என்று சாமளாபுரம் கிராம  நீரினை பயன்படுத்துவோர் சங்கத்  தலைவர் வை.பழனிசாமி கோரியுள் ளார்.

பருவமழை தொடங்கும் காலம்: மானியவிலை விதை வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 22 – இந்த ஆண்டு பருவமழை தொடங்கும் காலமாக உள்ளதால் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை வழங்குமாறு தமிழ் நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றியச்  செயலாளர் வை.பழனிச்சாமி கோரியுள் ளார். விவசாய நிலங்களில் இறவையாகவும், மானாவாரியாகவும் தீவனப் பயிரான மக்காச் சோளம், தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, நரிப் பயிறு, கொள்ளு, துவரை போன்ற விதை  தானியங்களை தொடக்க வேளாண்மை கூட் டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.  மழை பெய்தவுடன் டிராக்டர் உள்ளிட்ட உழவு கருவிகள் மூலம் விதைப்பு செய்வ தற்கு வேளாண் துறை மூலம் வழங்க வேண் டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.ஆதார் கார்டில் பிறந்ததேதி திருத்தம் செய்வ தற்கு பிறப்புச் சான்றிதழ் கேட்கின்றனர். 1950  முதல் பிறந்த பெரும்பாலானோருக்கு பிறப் புச்சான்றிதழ் இல்லை. பள்ளி மாற்றுச்சான் றிதழ் தந்தால் இ சேவை மையங்களில் ஏற்ப தில்லை. இதனால் 50 வயதுக்கு மேற்பட் டோர் எவ்வித திருத்தமும் செய்ய முடிவ தில்லை. பெரும்பாலான விவசாயிகள் இத னால் நலத்திட்ட உதவிகள் பெற முடிவ தில்லை. எனவே ஆதார் போர்ட்டலில் உரிய  மாற்றம் செய்து வயதானோர் பயனடையும் வகையில் திருத்தங்கள் செய்வதற்கு உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என் றும் வை.பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

வார இறுதி நாட்களில் 35 சிறப்பு பேருந்துகள்

திருப்பூர், ஜூலை 22 – திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி  மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு வார இறுதி நாட்களான  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழித்தடப் பேருந்துகளுடன் 35  சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசுப்  போக்குவரத்துக் கழகத் திருப்பூர் மண்டலப் பொதுமேலா ளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.