districts

img

வால்பாறை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி

கோவை, அக்.20- வால்பாறையில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.  கோவை மாவட்டம், கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி  மாணவர்கள் 10 பேர் இரு சக்கர வாக னங்களில் வால்பாறைக்கு சுற்றுலா  சென்றுள்ளனர். இவர்கள் வால்பாறை அடுத்துள்ள சோலையார் ஆர்ச் அருகே ஆற்றில் இறங்கி குளித்துள் ளனர். அப்போது ஆற்றில் ஆழம்  அதிகம் உள்ள பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 5 மாண வர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். இத னைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுகுறித்து உடனடி யாக அருகில் இருந்தவர்களை உத விக்கு அழைத்தனர். பின்னர் இது  குறித்து உடனடியாக வால்பாறை தீய ணைப்பு மற்றும் மீட்புப்படைத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய 5 பேர் உடலை மீட்ட னர். உயிரிழந்தவர்கள் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் என முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. தண்ணீரில் மூழ்கி தத்தளித்தவர் களை எவ்வளவோ முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றும் அவர்களால் அவர்களை காப்பாற்ற முடிய வில்லை என தீயனைப்புத்துறையி னர் தெரிவித்தனர். சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.