திருப்பூர், பிப்.20- பல்லடம் அருகே கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது. நல் வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப் பட்டு 47 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாரா புரம் சாலையில் கள்ளகிணறு என்ற இடத்துக்கு அருகே திருநெல்வேலி யிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் இடதுபக்க முன் சக்கரம் திடீரென பேருந்தில் இருந்து கழன்று உருண்டு ஓடியது. சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவு வரை சென்று சாலையோரம் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தது. பேருந்து சக்கரம் கழன்றதை அடுத்து பேருந்து ஓட்டுனர் காமராஜ் சாமர்த்தியமாக பேருந்தை சாலையோ ரமாக நிறுத்தினார். இதையடுத்து நல் வாய்ப்பாக விபத்து ஏற்படுவது தவிர்க் கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்து னர் சதிஷ்குமார் பயணிகள் அனைவ ரையும் பேருந்தில் இருந்து இறங்க வைத்து சாலையோரம் நிறுத்தினார். நடத்துனர் சதீஷ் குமார் கொடுத்த தக வலின் பேரில் பல்லடத்தில் இருந்து மாற்று பேருந்தை அரசு அதிகாரி கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைத்த னர். நடுவழியில் சிக்கித் தவித்த பயணி கள் 47 பேரும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சக்கரம் கழன்று பழுதான பேருந்தை அங்கிருந்து அகற்றி பல்லடத்திற்கு கொண்டு சென்றனர்.