பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் 45 ஆசிரியர் கள் (Career Advancement Scheme) திட்டம் மூலம் பதவி உயர்விற்கு நேர்கானலில் கலந்துகொண்டு, பதவி உயர்வு முடிவு கள் எடுக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன பின்பும் உத்தரவுகள் வழங்கா மல் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் 2005 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு ஆணையை நிறுத்தி வைத்திருப்பதை எதிர்த்து ஆசிரியர்கள் பதிவாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.