கோவை, ஏப்.4- கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 44 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.பத்ரிநா ராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப் 1ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் ரூ.1.7 கோடி மதிப்பிலான ஆயிரம் செல்போன்கள் மீட்கப்பட்டு பொதுமக் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மாவட் டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங் களிலும், செல்போன் மாயமான வழக்கு களை தனியாக கையாண்டு செல்போன்க ளை பறிமுதல் செய்து வருகின்றனர். இதே போல கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் சுமார் ரூ.1.9 கோடி மதிப்பிலான 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 680 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். அதில் 330 பேரிடம் நன்னடத் தை பிணை பெறப்பட்டுள்ளது. 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர். இதே போல, கடந்த 3 மாதங்களில் 126 குற்ற சம்பவங்கள் நடைபெற்று அதில் குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டு அவர்க ளிடமிருந்து சுமார் ரூ.1.7 கோடி மதிப்பி லான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் நடந்த 53 கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 44 போக்சோ வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 56 போக்சோ வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 26 வழக்குகளில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்க தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கல் லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கத் தை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சைபர் கிரைம் குற்றச்சம்பவ களில் இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இதுவரை ரூ.90 லட்சம் வரை வங்கி கணக் கில் இருந்து மோசடியாக திருடப்பட்டதாக வந்த புகாரில் ரூ.60 லட்சம் மீட்டு பாதிக் கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு திருப்பி பெற்று தரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 357 ரவுடிகளில் 300 பேருக்கு பிணை வாரண்ட் பத்திரம் கொடுக் கப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளனர் என்றார்.