43 டன் காய்கறிகள் விற்பனை
தருமபுரி, செப். 30- தருமபுரி உழவர் சந்தையில் சனியன்று 43 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக முதி யவர்கள் அவதிக்குள்ளாகினர். தருமபுரி உழவர் சந்தையில் ஏராளமானோர் காய்கறி வாங்க வந்திருந்தனர். சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காய்கறிகளின் விலை குறைந்து விற்பனையானது. தக்காளி கிலோ ஆறு ரூபாய்க்கும் கத்தரிக்காய் கிலோ ரூ24க்கும் வெண்டைக்காய் ரூ8க்கும் அவரைக்காய் ரூ28, முள்ளங்கி கிலோ ரூ18, முருங்கைக்காய் கிலோ ரூ55 என விற்பனையானது. சென்ற ஆண்டு தக்காளி கத்தரிக்காய் வெண்டைக்காய் அவரைக்காய் முருங்கைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் மூன்று மடங்கு விலை உயர்ந்து விற்பனை யானது. தற்போது காய்கறிகள் விலை குறைவால் விவசா யிகளுக்கு குறைந்த அளவே லாபம் கிடைத்துள்ளது. சனி யன்று தருமபுரி உழவர் சந்தைக்கு 43 ஆயிரத்து 890 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. 8779 நுகர்வோர் வருகை தந்து 11 லட்சத்து 66 ஆயிரத்து 475 ரூபாய்க்கு காய்கறி கள் விற்பனையானது. தருமபுரி உழவர் சந்தை நுழைவாயிலில் ஏராளமா னோர் தங்கள் இருசக்கர வாகனங்களை நுழைவாயிலில் விட்டு விட்டு செல்வதால் உழவர் சந்தைக்கு உள்ளே செல்ல முடியாமல் முதியவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதல்
புதுதில்லி, செப்.30- மகளிருக்கான 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடு மசோதா விற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின் பொழுது மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ், இடதுசாரி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக் களை பதிவு செய்தனர். தொடர்ந்து மக்களவையில் நடத்தப் பட்ட வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். மாநிலங்களவையில் அனைத்து எம்பிக்களுமே ஆதரவு தெரிவிக்க, இருஅவை களிலும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா எளிதாக நிறைவேறியது. ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ள, இந்த மசோதா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வின் ஒப்புத லுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்ட மாக உள்ளது.
மின்வாரிய ஊழியர்களை தாக்க முயற்சி
கோவை, செப்.30- கோவை அருகே விவசாயியின் தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க வந்த மின்வாரிய ஊழியர்களை தாக்க முயற்சித்த போது தடுக்கச் சென்ற காவல்துறை மீதும் தாக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே ஜல்லிப்பட்டி கிராமத் தில் வசிப்பவர் மயில்சாமி. இவர் தோட்டத்திற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக மின்வாரி யத்தில் விண்ணப்பம் அளித்து வந்த நிலையில், அவரது பக்கத்து தோட்டத்தில் உள்ளவர் மயில்சாமியின் தோட்டத் திற்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சனியன்று பல்லடம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர், சுல்தான்பேட்டை காவல்துறை பாது காப்போடு மயில்சாமியின் தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க வந்திருந்தார். அவர்கள் மின் இணைப்பு பணி யில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த பழனிச்சாமி, செல்வ குமார் மற்றும் சாவித்திரி ஆகியோர் மின் இணைப்பு வழங்கக் கூடாது எனக்கூறி மின்வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். மேலும், மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டி ருந்த மின்சார வாரிய ஊழியர்களையும், பாதுகாப்பு பணி யில் இருந்த காவல்துறை மீதும் பழனிச்சாமியின் குடும்பத் தார் தாக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மயில்சாமியின் தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், மயில்சாமியின் தோட் டத்திற்கு வரும் வழித்தடத்தை மறித்து குழி தோண்டி அவரது வீட்டிற்கு வரும் பைப்லைன் ஆகியவற்றை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சார வாரிய ஊழியர்களையும், காவல்துறை மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்த பழனிச்சாமி, செல்வகுமார் மற்றும் அவரது தோட்டத்தில் பணிபுரியும் நபர்கள் ஆகி யோர் மீது சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை முன்னாள் டிஐஜி-க்கு ஒரு ஆண்டு சிறை
கோவை, செப்.30- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பதிவுத் துறை முன்னாள் டிஐஜி-க்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையில் பதிவுத்துறை டிஐஜியாக பணியாற்றியவர் வி.மணி (74). இவர் தனது பெயரிலும், தமது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக செத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டன. கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை ரூ. 22 லட்சத்து 83 ஆயிரத்து 583 வரை வருமானத்துக்கு அதிக மாக செர்த்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு விசா ரணை நிறைவடைந்தது. இதையடுத்து, வெள்ளியன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகன ரம்யா, பதிவுத் துறை முன்னாள் டிஐஜி வி.மணிக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட் டார்.