districts

img

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள் ஒற்றுமையே வலிமை...

உத்தர்காண்ட் மாநிலம், சில்க்யாரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற் காக சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நி லையில் கடந்த 12 ஆம் தேதி  சுரங்கம் அமைக்கும் பணி யின் போது சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுமார் 4.5கி.மீ தொலைவு கொண்ட இந்த சுரங்கத்தின் வாயிலில் இருந்து 200மீ தொலைவிற்கு  இடிபாடுகள் ஏற்றப்பட்டு 41 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி னர். சுமார் 17 நாட்களாக பல்வேறு குழுக்கள்  நடத்திய பெரும் போராட்டத்துக்குப் பின்னர், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பெரும்பாலான மீட்பு பணிகள் இயந்திரங்களின் உதவி யுடன் நடைபெற்ற போதிலும் நெருக்கடியான சூழலில் ‘எலி வளை’ சுரங்கப்பணி நிபுணர்கள் பேருதவியாக இருந்தனர்.  சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க 12 மீட் டர்கள் மட்டுமே துளையிட வேண்டும் என்ற நிலையில்,  துளையிடும் பணியிலிருந்த ஆகர் (Auger) இயந்திரத்தின் ஒரு பகுதி சுரங்கத்தில் சிக்கியது. சிக்கிய பகுதியை எடுத் தால் மட்டுமே அடுத்த கட்ட மீட்பு பணியை தொடங்க முடி யும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும் மனிதர்கள் நேரடியாக இறங்கினால் மட்டுமே நிலைமையை சரி செய்ய முடியும் என்ற நிலையும் ஏற்பட்டது. இத்தகைய சூழலில், மீட்புக்குழு ‘எலி வளை’ முறை யைப் பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்தது. அதனைய டுத்து தில்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்க ளைச் சேர்ந்த ‘எலி வளை’ நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட னர். மிச்சமிருந்த தூரத்தையும் துளையிட்டப் பின்னர் தேசி யப் பேரிடர் மீட்புப்படையினர் அனைவரையும் பத்திர மாக மீட்டனர்.  சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மட்டுமல்ல செய்தி, மீட்டுக்கொண்டு வருவதற்கு உயிரை பணயம் வைத்து சென்றவர்கள் யார் என்பதும் இன்று பேசப்பட வேண்டிய செய்தி. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அர சியல் தலைமைக்குழு  உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி தனது எக்ஸ்  தளத்தில் தெளிவாக பதிவிட்டுள்ளார். எலி வளை தொழில் நுட்பம் மூலம் 41 சுரங்க பணியாளர் களை காப்பாற்றியவர்கள்: ஃபெரோஸ்/ முன்னா குரேஷி/  ரஷீத்/ இர்ஷாத்/ நசீம்/ மோனு/ அங்குர்/ ஜத்தின்/ சவுரப்/ தேவேந்தர்/ வகீல் ஹாசன். அனைவருக்கும் வணக்கம். பா.ஜ.க.வும் முதல்வர் தமியும் கூறியபடி உத்தர்காண்டிலி ருந்து அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற்றி இருந் தால் இப்பொழுது யார் இந்த பணியை செய்திருப்பார்கள்? இந்து/முஸ்லீம் தொழிலாளர்கள் இணைந்துதான் இதனை வெற்றிகரமாக முடித்தனர். ஒற்றுமையே வலிமை! தெளி வாகிறது என பதிவிட்டுள்ளார். -செ.முத்திவீரணன்