மே.பாளையம், ஏப்.18- மேட்டுப்பாளையம் அருகே வனப்பகு தியில் சுற்றித்திரிந்த புள்ளிமான்களை வேட் டையாடிய நான்கு பேரை வனத்துறையி னர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் உள்ள புள்ளி மான்கள் வனத்தினுள் நில வும் வறட்சி காரணமாக காட்டை விட்டு வெளியேறி, இயங்காமல் பூட்டி கிடக்கும் விஸ்கோஸ் ஆலை பின்புறம் பட்டா நிலங்க ளில் சுற்றி திரிகின்றன. கூட்டம் கூட்ட மாக அங்குள்ள புதர்களில் புள்ளி மான்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில், சிலர் அதனை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்வதாக சிறுமுகை வனத் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து விஸ்கோஸ் ஆலை பின்புறம் உள்ள பகுதிகளில் வனத்துறையி னர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நால்வரிடம் விசாரனை நடத்தப்பட் டது. விசாரணையில், புள்ளி மான்கள் வேட் டையாடியது தெரிய வந்தது. இதனைய டுத்து அவர்களிடம் இருந்து வேட்டையா டப்பட்ட புள்ளிமான் இறைச்சியை பறிமு தல் செய்தனர். மேலும், நடத்தப்பட்ட விசார ணையில், அவர்கள் அம்மன் புதூர் பகுதி யைச் சேர்ந்த அஜீத்குமார், அருள் குமார், மணிகண்டன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த வனத் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.