சிஐடியு தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் வி.பி.சிந்தனின் 35 ஆவது நினைவு தினம் கோவையில் அனுசரிக்கப்பட்டது. சிஐடியு கோவை மாவட்டக்குழு சார்பில் தியாகி குமரன் வீதி தங்கநகை தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.