districts

img

தோழர் எஸ்.பி.கந்தசாமியின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல்

திருப்பூர், ஜன. 27 - ஊத்துக்குளி வட்டாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களையும், விவசாயிகளையும் அணிதிரட்டுவதிலும், செங்கொடி இயக் கத்தை கட்டியமைப்பதிலும் முக்கிய பங்காற்றிய சாலப்பா ளையம் எஸ்.பி.கந்தசாமி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட் டது. தோழர் எஸ்.பி.கந்தசாமியின் 32 ஆம் ஆண்டு நினைவஞ் சலி நிகழ்ச்சி வியாழனன்று சாலப்பாளையம் எஸ்.பி.கந்த சாமி நினைவிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுக்கா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட  செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஈரோடு மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி உள்பட திரளானவர்கள், மாதர் களும், குடும்பத்தினரும் மலரஞ்சலி செலுத்தினர். பின்பு அவரது நினைவாக நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனி சாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செய லாளர் கு.சரஸ்வதி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்  ஜெ.கந்தசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன், இந்திய ஜனநாயக  வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலமுரளி, தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்டகுழு உறுப்பினர் ராமசாமி, அனைத்து வகை மாற்றுத்திறனாளி சங்க தாலுக்கா கன்வீனர்  சசிகுமார் ஆகியோர் நினைவுரை ஆற்றினர். கட்டுமான சங்க  நிர்வாகி மகேந்திரன் நன்றி தெரிவித்தார்.