districts

தரங்கம்பாடி அருகே பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயம்

தரங்கம்பாடி, நவ.15- நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள நண்டலாறு காவல் சோதனை சாவடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்காலில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து வெள்ளியன்று காலை மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரைக்காலில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து பொறையாறு சோதனை சாவடி தேசிய நெடுஞ்சாலையில் வேக மாக வந்துள்ளது. அப்போது எதிரே வந்த கார் நிலை தடுமாறி வந்ததால் பேருந்து ஓட்டுனர் சாலையின் ஓரமாக செல்ல முயற்சித்த போது அருகில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வயலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த செல்லூரை சேர்ந்த வனிதா(48), தியாகராஜன் (37), சீர்காழியை சேர்ந்த பத்மா (50), காரைக்காலை சேர்ந்த விமலா (33), பாலா மணி (50), பொறையாறு பகுதியை சேர்ந்த சுந்தரி (34), ஆயக்கா ரன்புலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (26) உள்ளிட்ட 30 க்கும் மேற் பட்டோர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த வர்கள் பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மேலும் பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுநர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த நடராஜன் (35) மேல் சிகிச்சைக்காக மயிலாடு துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

;