சேலம், ஏப்.2- சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் 3 வயது சிறு மிக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்லர் மணி செய்தியார்களிடம் கூறியதா வது, சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனைக்கு சேலம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள நாமக் கல், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் நோயாளி கள் அதிகளவில் வருகின்றனர். இத னிடையே இம்மருத்துவமனையில் 3 வயதுடைய சிறுமிக்கு இதயத்தில் ஒன் றிற்கும் மேற்பட்ட ஓட்டைகள் இருந் ததை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமுடன் உள்ளதால், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள் ளார். இதேபோல் 20 மாதம் நிறைவ டைந்த சிறுமிக்கு பிறவிலேயே இருந்த இதய கோளாறு கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளது. சேலம் மருத்து வமனைக்கு அதிக பெண்கள் பிர சவத்திற்கு வருகை தருகின்றனர். ஒரு மாதத்தில் 900 பிரசவங்கள் வரை நடைபெறுகிறது, என்றார். மேலும், தற்போது கோடை கால மாக இருப்பதால் பொதுமக்கள் அதிக குடிநீர் பருக வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் இருக்கும் பட் சத்தில் மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடாமல் மருத்துவர்களை சந்திக்க வேண்டும், என்றார். முன்ன தாக, இந்நிகழ்வின்போது, இதய அறுவை சிகிச்சை துறையின் பேரா சிரியர் ராஜராஜன், மருத்துவ அலுவ லர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்த னர். மேலும், உடல் நலம் தேறிய மூன்று வயது சிறுமிக்கு பொம்மை கள் பரிசாக வழங்கப்பட்டன.