districts

கல்குவாரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கோவை, ஜூலை 23- பெரியநாயக்கன்பாளையம் அருகே கக் குவாரியில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் முரு கேசன். இவரது மகன் வினு (18). தனியார் கல் லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவ ரது நண்பரான அதேபகுதியைச் சேர்ந்த நித் தீஷ் (18), டுட்டோரியல் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு  படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் அவர்களது நண்பர்களான கோட்டைபாளை யத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனுஷ் (21), கூலித்தொழிலாளி சுரேந்தர் (20), அன் னூர் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த லோகேஷ்ராஜ் (22) ஆகியோருடன் பிளிச்சி  அருகே உள்ள காளவராயன் மலைப்பகு திக்கு சென்றனர். வினு, நித்தீஷ் ஆகியோர் மலை அருகே உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர். வினு, நித் தீஷ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கல்குழியில் மூழ்கி இறந்தனர். குளிக்க சென்றவர்கள் நீண்ட நேரமாக திரும்பி வராததால், சந்தேகமடைந்த நண்பர் கள் 2 பேரையும் தேடினர். அப்போது அவர் கல் குழியில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம்  போட்டனர்.

இதனைக்கேட்ட அக்கம் பக்கத் தினர் விரைந்து சென்றனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற் றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர், கல் லூரி மாணவர் உள்பட 2 பேரின் உடல் களை தேடினர். இரவு 9 மணி வரை 4 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இரவானதால் போலீசார் மற் றும் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்ற னர். இதையடுத்து ஞாயிறன்று காலை முதல் மீண்டும் உடல்களை தேடும் பணியில் ஈடு பட்டனர். 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வினு, நித்தீஷ் ஆகியோரின் உடல்களை தீய ணைப்பு வீரர்கள் மீட்டனர். இவர்களை போல நாயக்கனூரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் நித்யா னந்தன் (16) என்பவர், அவரது நண்பர்களு டன் அதே கல் குழியில் குளித்துள்ளார். அவ ரும் கல்குவாரியில் மூழ்கி இறந்தார். அவரது உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் போலீசார் இறந்த 3 மாணவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி யில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.