செல்போன் பறித்த 3 பேர் கைது
உதகை, டிச.18- உதகை அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே திருட்டு வழக்கில், ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த கேத்தி, மைனலா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (21), நொண்டி மேடு, பர்ன்கிழ் பகுதியை சேர்ந்தவர்கள் பாசில் என்ற அப்பாஸ் (18), ராபின் என்ற கேட் (22), விக்ரம் (20) ஆகியோர் உதகை மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். அப்போது சந்தோஷிற்கும் மற்ற 3 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச் சனை ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் டிச.15 ஆம் தேதி யன்று, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக சந்தோசை, அப்பாஸ் உட்பட 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது, அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி விட்டனர். இதுகுறித்து சந்தோஷ், உதகை மத்திய காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பாஸ் உட்பட 3 பேரை கைது செய்தனர். இதன்பின் மூன்று பேரையும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்ப்படுத்தி, உதகை சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஏற்கனவே செல்போன் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று, டிச.14 ஆம் தேதியன்று ஜாமீனில் வெளியே வந்ததும், மறு நாளே மீண்டும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.