districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இன்று விதைகள் கண்காட்சி

தருமபுரி, மார்ச் 23- பாப்பாரப்பட்டியில் வெள்ளியன்று (இன்று) உயர்தர உள்ளூர் விதைகள் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில்  உயர்தர உள்ளூர் விதை ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி பாப்பாரப்பட்டி வேளாண்மை அறி வியல் நிலையத்தில் வெள்ளியன்று (இன்று) நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த படி, விவசாயிகளுக்கு தேவையான விரும்பத்தக்க குணங் களுடைய பாரம்பரியம் மிக்க பல்வேறு உள்ளூர் விதை  ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில்  பயன்படுத்தினால், தருமபுரி மாவட்ட பகுதிக்கு ஏற்ற விதை ரகங்களை உருவாக்க முடியும். இதை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு உயர்தர விதை ரகங்களை காட்சிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

உதகை, மார்ச் 23- பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒருவர்  கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த தம்பதிக்கு 6 வயது  பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறது. இந்த நிலையில் தம்பதி இடையே பிரச்சனை ஏற்பட்டதால், சிறுமியின் தந்தை தனியாக சென்று விட்டார். குழந்தை யுடன் சிறுமியின் தாயார் தனது உறவினர்களுடன் வசித்து  வருகிறார்.  இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தையின் தாயார் குழந்தை படிக்கும் பள்ளியில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து  கொள்வதற்காக சென்று விட்டார். அப்போது சிறுமி வீட்டின்  அருகில் உள்ள மரத்தடியில் விளையாடிக் கொண்டு இருந் தார். அப்போது அந்த வழியாக வந்த ரமேஷ் குமார் (45)  என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள  பாழடைந்த வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து  சிறுமிக்கு பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தாயாரிடம் கூறி  அழுதுள்ளார். இதையடுத்து சிறுமி உதகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப் பட்டது தெரியவந்தது. விசாரணையில் 2 நாட்களுக்கு முன்னர் சிறுமியை தூக்கி  சென்ற ரமேஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள் ளார். இதுகுறித்து உதகை ஊரக காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது. இதன்பேரில், ஆய்வாளர் அல்லிராணி (பொறுப்பு) தலை மையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர். இதன் பின்னர்  அவரை உதகை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

குறைந்த விலையில் கார் தருவதாக மோசடி

நாமக்கல், மார்ச் 23- நாமக்கல் அருகே குறைந்த விலையில் கார் வாங்கிய தருவதாக மோசடி செய்த நபரை போலீசார் தேடி வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (54), லாரி  ஓட்டுநர். இவர் பழைய கார் வாங்குவதற்காக முகநூல்  பக்கத்தின் மூலம் அணுகி உள்ளார். இந்நிலையில், அவரது  தொலைபேசி எண்ணின் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் தன்னிடம் நல்ல நிலையில் கார் உள்ள தாகவும், அதனை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி னார். இதற்காக ரூ.1.5 லட்சம் கொடுத்தால் அந்த காரை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறினார். இதனை நம்பிய லட்சுமணன் அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கில் போன் பே மூலம் 3 தவணையாக ரூ.1 லட்சத்து 50  ஆயிரத்தை அனுப்பினார். இதையடுத்து, பணம் அனுப்பி 2 ஆண்டுகள் கடந்தும்  அந்த நபர் காரை கொடுக்கவில்லை. மேலும், அவரது  தொலைபேசியை தொடர்பு கொண்ட போது, அந்த தொலை பேசி உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்தது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில்  வழக்கு பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத வரின் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து அவரை அடை யாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

அன்னூர், மார்ச் 23- ஆடம்பரமாக செலவு செய்து சொகுசாக  வாழ ஆசைப்பட்டு வங்கியில் கொள்ளை யடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்தனர். கோவை, அன்னூர் சத்தி சாலையில் ஐடிஎப்சி என்ற தனியார் வங்கியின் கிளை  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்தாண்டு டிசம்பர் 20ஆம் தேதி நள்ளிரவில்  பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 3 லட்சம் ரூபாய்  மதிப்பிலான பணம் மற்றும் நகை லாக்கரி லிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி நிர்வாகம் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.  இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார் வங்கியில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர்  முகத்தை மறைத்தவாறு வங்கியில் நுழைந்து  லாக்கரில் இருந்து சாவகாசமாக பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இது  தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,  வங்கியின் பழைய கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில்  அடிக்கடி வங்கிக்கு வரும் வாலிபர் ஒருவர்  சந்தேகப்படும் வகையில் வங்கியை நோட்ட மிட்டது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம்  இடுக்கியைச் சேர்ந்த மனோஜ் என்பதும், அன்னூர் அடுத்த குன்னத்துராம் பாளை யத்தில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மனோஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.  இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில்  போலீசார் அன்னூர் அருகே சுற்றி வளைத்துப்  பிடித்தனர். இதையடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, சொகுசு  வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வங்கியில் கொள்ளை பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்ததும், அந்த பணத்தில் கோவையில் இருந்து விமானம் மூலம், மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள் ளிட்ட நகரங்களுக்கு பயணித்து, அங்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மனோஜை கைது செய்த போலீசார், அன்னூர் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சொகுசு வாழ்க்கைக்காக வாலிபர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்

சேலம், மார்ச் 23- சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதிநவீன சிகிச்சை மையம்  அமைக்கப்பட உள்ளது. சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம்  மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி, ஈரோடு உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் சிகிச்சைக்கு வந்து செல் கின்றனர். இதை கருத்தில் கொண்டு சூப்பர்  ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் செயல் பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவம்,  பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, இருதயம், நரம்பியல், புற்றுநோய்  உள்ளிட்ட  37 துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும்  வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தீர்க்கும் மையாகவும் சேலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் 80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சாரசரி யாக 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு,  புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மருத்து வர்களும், முழுமையான மையமும் இல்லை.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படுவதால் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாறி வரு கிறது. மேலும், புற்றுநோய் பிரிவினை நவீனப் படுத்தும் வகையில் லீனியர் கருவி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்  மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச் சைக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வது குறையும். புற்றுநோய் அறிகுறிகள்  கண்டறிய சிறப்பு பரிசோதனைகள், முகாம் கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.  தொடர்ந்து, புற்றுநோயாளிகளுக்கு ரேடியோ தெரபி அதிநவீன சிகிச்சை மையம் அமைக் கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள்  விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சிகிச்சை  மையத்திற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை மையத் திற்கான பணிகளை தமிழ்நாடு மருத்துவ  சேவைகள் கழகத்தினர் மேற்கொள்கின்ற றனர். அதிகாரிகள் இதற்கான பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள  புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒருங்கிணைந்த  மையமாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு மருத்துவ சேவை கள் கழகம் மூலம் ரேடியோ தெரபியில் அதி நவீன சிகிச்சையளிக்க மையம் அமைக்கப் படுகிறது. இதற்காக காசநோய் ஆய்வக கட்ட டத்தை இடித்து விட்டு, புதியதாக ரூ.2 கோடியில் கட்டடம் கட்டப்படுகிறது. கருவி கள் கொள்முதலுக்கு தனியாக நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை மையம் கட்டுமான பணிகள், கருவிகள் அமைக்கும் பணி என அனைத்தும் தமிழ்நாடு  மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் தற் போது ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

இறைச்சி கடைகள் நடத்த அனுமதி அளித்திடுக

ஈரோடு, மார்ச் 23- புன்செய் புளியம்பட்டியில் மாட்டி றைச்சிக்கடை தொடர்ந்து நடத்த அனுமதிக்க  வேண்டும் என சர்வதேச சிறுபான்மை மக்கள்  உரிமை நாள் கூட்டத்தில் மனு அளிக்கப் பட்டது. சர்வதேச சிறுபான்மை மக்கள் உரிமை நாள் கூட்டம் வியாழனன்று ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக்குழுவின் மாவட்ட தலைவர் இசாரத்தலி, செயலாளர் ப.மாரிமுத்து உள் ளிட்ட சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பேசிய மாரிமுத்து, குறைந்த விலையில் கிடைக்கும் அதிக சத் துள்ள உணவு மாட்டிறைச்சியாகும். இதன்  மூலம் சிறுபான்மை மக்களும், தலித் மக்களும் பெருமளவில் பயன் பெற்று வரு கின்றனர். இந்நிலையில், புன்செய் புளியம் பட்டி நகராட்சியில் உள்ள வாரச்சந்தையில் செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகள்  அகற்றப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல் படவிடாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இது  குறித்து, நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறை யிட்டும் கடைகள் நடத்த நாளது தேதிவரை  அனுமதிக்கப்படவில்லை. மன்றத்தில் ஒப்புதலோடு ஸ்லாட்டர் ஹவுஸ் அமைத்து  நிரந்தரமாக கடை அமைத்துக் கொடுக்கும்  நடவடிக்கை என்பது ஒருபுறம் நடக்கட்டும்.  ஆனால், அதுவரை கடை உரிமையாளர்கள் மற்றும் இதனால் பயன்பெறுவோர் நலனைக்  கருத்தில் கொண்டு மாட்டிறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என் றனர். முன்னதாக இக்கூட்டத்திற்கு, செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார்  தலைமை ஏற்றார். இதில், மாவட்ட வருவாய்  அலுவலர் சந்தோஷினி சந்திரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எத்தனை அடி செடி வளர்க்கலாம்? சார் ஆட்சியரிடம் விவசாயி கேள்வி

திருப்பூர், மார்ச் 23 - ஊத்துக்குளி வட்டம், செல்லிபாளையம், கரைக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆர்.ராமசாமி சார் ஆட்சியரிடம் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  ஊத்துக்குளி வட்டம், புஞ்சை தளவாய்பாளையம் கிராமத் தில் எனது பூளைக்காடு விவசாய பூமியில், அரசூர் முதல் ஈங் கூர் வரை செல்லும் உயர்மின் பாதை செல்கிறது. இந்த  பூமியில் இரண்டு புளியங்கன்றுகள் சுமார் எட்டு அடி உயரம்  உள்ளது. அதை வெட்ட வேண்டும் என மின்வாரிய அலுவலர் கள் கூறுகிறார்கள். இந்த நிலத்தில் பலன் தரும் செடிகளான முருங்கை, கரு வேப்பிலை, கொய்யா, புளியங்கன்று போன்ற இன்னும் சில  ரகங்கள் நடலாம் என இருக்கிறேன். எனவே நிலத்தில் இருந்து  எத்தனை அடி உயரம் வரை செடிகள் வளர்க்கலாம் என தெரி விக்கவும். அத்துடன் செடிகளை வெட்ட வரும்போது எனக்கு  கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆர்.ராம சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், மார்ச் 23 - திருப்பூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாக னங்களை ஓட்ட வேண்டும். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு புதனன்று பேரணி  தொடங்கியது. இப்பேரணியை திருப்பூர் போக்குவரத்து உதவி ஆணையர் சுப்பிரமணி கொடியசைத்து துவக்கி  வைத்தார். இப்பேரணியில் சாலை விதிகளை மதிப்போம்,  விபத்தினை தடுப்போம், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற முழக்கங்களுடன் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

மின்சாரம் தாக்கி கோயில் பூசாரி பலி

தாராபுரம், மார்ச் 23 - தாராபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் கோவில் பூசாரி செவ்வாயன்று உயிரிழந்தார். திருப்பூர், திருமுருகன் பூண்டி, ராஜீவ்காந்தி நகர், ஒன் றாவது வீதியைச் சேர்ந்தவர் த.பாலசுப்பிரமணி (58). இவர்  தாராபுரம் பழைய கோட்டைமேட்டு தெருவில் உள்ள வீரேஸ் வரா கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவர்  திருப்பூரில் இருந்து மதியம் கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்துவிட்டு அங்கு இருந்த மின்விளக்குகளை ஆன் செய்தார். அப்போது மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில்,  பாலசுப்பிரமணியம் மயங்கி கீழே விழுந்தார். அங்கு வந்த  பக்தர்கள் பூசாரி மயங்கி கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி  அடைந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து  விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம் அருகே வேன் ஓட்டுநர் தற்கொலை

தாராபுரம், மார்ச் 23- தாராபுரம் அருகே வேன் ஓட்டுநர் தூக்கு மாட்டி தற் கொலை செய்து கொண்டார். தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக் குட்பட்ட கருங்காலி வலசு பகுதியை சேர்ந்தவர் சி.சஞ்சய்கு மார் (19). வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு முற்றத் தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த சஞ்சய்குமாரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அங்கு சஞ்சய்குமாரை பரி சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட் டதாக தெரிவித்தனர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், பெண் ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும், இருவரின் காதலுக்கு  பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சய்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்க லாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

அவிநாசி, மார்ச் 23 - அவிநாசி அருகே தள்ளுவண்டி தொழிலாளியிடம் கத்தி யைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீ சார் செவ்வாயன்று கைது செய்தனர். திருப்பூர் எஸ்.வி.காலனியைச் சேர்ந்தவர் பா.ரவி (40).  இவர் அவிநாசி - திருப்பூர் சாலையில் தள்ளுவண்டி உணவகம்  நடத்தி வருகிறார். செவ்வாயன்று காலை கடையை திறந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியைக்  காட்டி கொலை மிரட்டல் விடுத்து, ரவி சட்டைப்பையில் வைத் திருந்த கைப்பேசியை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். உடனே  அவர் சத்தம் போடவும் அருகிலிருந்தோர் இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில்  மதுரை, காமாட்சிபுரத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் (20),  திருவண்ணாமலையைச் சேர்ந்த துளசிராமன் (22) என்பது  தெரியவந்தது. இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்க ளிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த னர்.

திருப்பூர் ரேசன் கடையில் சிலிண்டர் விநியோக திட்டம் தொடக்கம்

திருப்பூர், மார்ச் 23 – திருப்பூரில் உள்ள ரேசன் கடையில்  வியாழனன்று முதல் இரண்டு கிலோ  மற்றும் ஐந்து கிலோ சிலிண்டர் விநியோ கம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தி யன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20  கிலோ எடையிலும், வணிக பயன்பாட் டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கி றது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர்  இணைப்பு பெற கேஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண், முகவரி சான்று ஆகிய  ஆவணங்களை சமர்ப்பிக்க வேண் டும். இதனிடையே திருப்பூர், சென்னை, கோவை போன்ற ஊர்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் தொழி லாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்க ளில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படு கின்றனர். அதேபோல் வெளி மாநில தொழிலாளர்கள் தள்ளுவண்டி வியா பாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ரேசன் கடைகளில் விற்க கூட்டுறவுத் துறை சார்பில் முடிவு செய் யப்பட்டது.  முதல் கட்டமாக திருப்பூர் அரண் மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு ஒன்று என்ற நியாய விலை கடையில் இந்தத் திட்டம் வியாழனன்று துவங்கப் பட்டது. இரண்டு கிலோ, ஐந்து கிலோக் களில், இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும், வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழி லாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், ஆதார் கார்டு அல்லது அவர்களது விலா சம் குறித்து ஏதோ ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம் என்றும் தற்போது திருப் பூர் நகரில் முதல் முறையாக இக்கடை யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் வரவேற்பைப் பொறுத்து விரைவில் ஒவ்வொரு நியாய விலை  கடைகளிலும் இத்திட்டம் நடைமு றைக்கு வரும் என்றும் இந்தியன் ஆயில்  நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

திருப்பூரில் மார்ச் 30இல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

திருப்பூர், மார்ச் 23 – திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 30ஆம் தேதி விவசாயிகள்  குறை தீர்க் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவ லக அறை எண் 20இல்  அன்று காலை 10.30 மணிக்கு  இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் நடைபெறும்போது,  விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைப்பது தொடர்பாக வேளாண் உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு  தேவையான தகவல்கள் வழங்கப்படும். திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் எஸ்.வினீத் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 23 - பாஜக எம்எல்ஏ தொடுத்த வழக்கின் அடிப்படையில் காங் கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை  விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் திருப் பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி மீது ஒன்றிய அரசு பொய் வழக்கு தொடுத்து  சிறை தண்டனை வழங்கி இருப்பதாகக் கூறி, பாஜகவை கண் டித்து, திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டதில் ஒன்றிய மோடி அரசின் பொய் வழக்க  கண்டித்தும், இந்த பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற கோரியும் காங்கிரசார் முழக்கம் எழுப்பினர்.

ஊத்துக்குளியில் சாலை, சாக்கடை பணி தொடக்கம்

திருப்பூர், மார்ச் 23 - ஊத்துக்குளி பேரூ ராட்சி, 7ஆவது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டத்தில் ரூ.20 லட் சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை மற்றும் நமக்கு நாமே  திட்டத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால் வாய் அமைத்தல் பணி வியா ழனன்று துவக்கி வைக்கப்ப ட்டது. இந்நிகழ்வில் ஊத்துக் குளி பேரூராட்சி தலைவர்  பழனியம்மாள் இராசுக் குட்டி, 7ஆவது வார்டு கவுன் சிலர் சரஸ்வதி குமார், பேரூ ராட்சி இளநிலை பொறியா ளர்,  வேலை ஒப்பந்ததாரர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:46.70/60அடி நீர்வரத்து:821கன அடி வெளியேற்றம்:119கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:52.04/90அடி.நீர்வரத்து:121கனஅடி வெளியேற்றம்:61கன அடி

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சிறுவன் உட்பட 3 பேர் கைது

கோவை, மார்ச் 23- கோவை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.  கோவை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு  படித்து வருகிறார். சிறுமியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்ட வர். இந்நிலையில், சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் திரு நங்கையிடம் கடந்த மார்ச் 20 ஆம் தேதியன்று சிறுமி பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் சிறுமி 3 பேர் பாலி யல் வன்கொடுமை செய்தாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திருநங்கை, குழந்தை கள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உட னடியாக போலீசார் சிறுமியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சிறுமி வீட்டின் அருகே மதன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர்  பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்.12 ஆம் தேதி மதன் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டல்  விடுத்துள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு வீட்டின் அருகே வசிக்கும் 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவ னும் கடந்த மார்ச் 15 ஆம் தேதி சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ததும் தெரியவந்தது. மேலும் சிறுமியின் தந்தையின் நண்பரான சதாசிவம் (48) என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவ லும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 15 வயது சிறு வன், மதன், சதாசிவம் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தின்  முன் நிறுத்தி, சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 2  பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு

நாமக்கல், மார்ச் 23- நாமக்கல் அருகே சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க  கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், கூட் டம் பாதியில் முடிந்தது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி,  லத்துவாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்க ளுக்குட்பட்ட பகுதியில், தமிழ்நாடு அரசு தொழில் துறையின் மூலம், சிப்காட் தொழிற்  பேட்டை அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக  சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நி லையில், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சிப் காட் எதிர்ப்பு குழு சார்பில், உலக தண்ணீர்  தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், விளை நிலங்களில் சிப்காட்  வருவதை தவிர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட 5 கிராம பஞ் சாயத்து தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.  இந்நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ் சாயத்துக்களில் புதனன்று கிராமசபை கூட் டம் நடந்தது. அரூர் பஞ்சாயத்தில், கடந்த ஜன வரி 26 ஆம் தேதி நடந்த கிராம சபை கூட்டத் தில், சிப்காட் அமைக்கக்கூடாது என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தீர்மா னத்தின் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. அதனால், புதனன்று நடந்த கூட்டத்தில், மீண்டும் அந்தத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப் போது அங்கு இருந்த சிலர், சிப்காட் அமைக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அத னால், பஞ்சாயத்து தலைவர், செயலாளர், அதிகாரிகள், எந்த தீர்மானத்தையும் எழுதா மல் காலம் தாழ்த்தினர்.  இதனால் ஆவேசமடைந்த பொதுமக் கள், கிராமசபைக் கூட்டம் என்பது, பொதுமக் களால் கொண்டு வரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் சொல் வதை தீர்மானங்களாக நிறைவேற்றக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, பஞ்சாயத்து செயலாளர் ரவிச்சந்தி ரன், அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார் களோ அதை தான் எழுதுவோம் என கூறிய தாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், பஞ்சாயத்து அலுவலகம் முன் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதேபோல், பொது மக்களின் கோரிக் கையை தீர்மானமாக எழுத முடியாது எனக் கூறிய அரூர் பஞ்சாயத்து செயலாளர் கருப் பண்ணன், தீர்மான நோட்டை எடுத்துக் கொண்டு, அலுவலகத்துக்குள் ஓட்டம் பிடித் தார். அவற்றை படம் பிடித்தவர்களின் கேம ராவை பறிக்க முயன்றதுடன், அவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். பொதுமக்களின் எதிர்ப்பு  காரணமாக, சிப்காட்டிற்கு எதிரான தீர்மா னங்கள் நிறைவேற்றாமல், கிராமசபை கூட் டம் பாதியிலே முடிந்தது.

ஆணவக்கொலை: இருவர் நீதிமன்றத்தில் சரண்

சேலம், மார்ச் 23- கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஜெகன் என்பவர் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்  தொடர்பாக பெண்ணின் தந்தை சங்கர் அவரது உறவினர்கள் அருள், திம்மராயன் உட்பட 10 பேர் மீது காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே பெண் ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றவர் களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இந்த கொலை  சம்பவம் தொடர்பாக குருமறை பள்ளி பகுதியை சேர்ந்த முரளி  (20), கிருஷ்ணகிரி ராய கோட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (21) ஆகிய இருவரும் சேலம் குற்றவியல் நீதிமன்ற எண் 4ல்  நீதிபதி யுவராஜ் முன்னிலையில் சரண் அடைந்தனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அருள் திம்மராயன் உள்ளிட்ட  மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்

சேலம், மார்ச் 23- சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், துட் டம்பட்டி ஊராட்சி, 3 ஆவது வார்டுக்குட்பட்ட பனஞ்சாரி,  சேவிவட்டம் ஆகிய பகுதியில் ஏராளமான பொதுமக்கள்  வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சரி யாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வரு கின்றனர். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள்  50க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் துட்டம்பட்டியிலி ருந்து மாட்டையாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த தாரமங்கலம் காவல் துறையினர் மற்றும் துட்டம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி துரைசாமி, ஒன்றியக் குழு துணைத்தலைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரையன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதில், சமாதானமடைந்த  பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குட்கா கடத்தல்: கைது

நீலகிரி, மார்ச் 23- தமிழ்நாடு -  கர்நாடக எல் லையான கக்கநல்லாவில் கூடலூர் காவல் ஆய்வாளர் பவுலோஸ் உள்ளிட்ட போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நா டகாவிலிருந்து வந்த மினி  லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 750 குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து மசினகுடி போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர். இதுதொடர்பாக உதகை  எமரால்டு பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார் (22) என்ற ஓட்டு நரை கைது செய்தனர்.