தருமபுரி, ஜூலை 27- தருமபுரியில் ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல் துறையினர் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலை காரிமங்கலம் அருகே வாகன சோதனை மேற் கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டனர். அதில் 94 மூட்டைகளில் சுமார் 4700 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர்களிடம் விசா ரணை செய்ததில் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (32), கிருஷ்ண கிரியை சேர்ந்த முருகன் (42), காரிமங் கலத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சம்பத் குமார் (44) என தெரியவந்தது. இந்த 3 பேரும் கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசியை கடத்தி செல்லும் போது பிடிபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப் படைக்கப்பட்டது.